search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆடி மாத பவுர்ணமி: கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 50 சிறப்பு பஸ்கள்
    X

    ஆடி மாத பவுர்ணமி: கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 50 சிறப்பு பஸ்கள்

    • 585 பஸ்களும் இயக்கப் பட உள்ளன.
    • நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 260 பஸ்களும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 585 பஸ்களும் இயக்கப் பட உள்ளன.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 45 பஸ்கள் என 90 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    மேலும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    இதுமட்டுமன்றி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை, படுக்கை மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட 50 பஸ்கள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், வார இறுதி நாள்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை 15 பஸ்களும், நாளை மறுநாள் பவுா்ணமி தினத்தை முன்னிட்டு 15 பஸ்களும் என 30 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பவுர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மறுநாள் 30 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×