search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்: பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு
    X

    ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்: பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு

    • பொதுமக்களிடம் அரசு கருத்து கேட்டு வருகிறது.
    • கருத்துக்களை பதிவு செய்ய படிவங்களும் வழங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெயை வழங்கலாமா? என்பது பற்றி பொதுமக்களிடம் அரசு கருத்து கேட்டு வருகிறது.

    கோவை, திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய் மற்றும் கொப்பறை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வில்லை என்று ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

    தங்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்ய ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து தமிழக அரசு அட்டைதாரர்களின் கருத்தை அறியுமாறு ரேஷன் கடை மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    இதற்கான கருத்துக்களை பதிவு செய்ய படிவங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாதம் இறுதி வரை பொது மக்களின் விருப்பத்தை கேட்டறிந்து அதன் விவரங்களை மாவட்ட நிர்வாகங்கள் அறிக்கையாக தொகுத்து அரசுக்கு அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    1 லிட்டர் பாமாயில் எண்ணைக்கு பதில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்குவது பற்றி முதற்கட்ட மாக கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வசிக்கும் சிலர் தேங்காய் எண்ணெயை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவதால் எத்தனை கார்டுதாரர்கள் இதற்கு மாறுவதற்கு ஆர்வமாக உள்ளனர் என்பதை அறிய கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபற்றி சிவில் சப்ளை அதிகாரி கூறுகையில் கேரள மாநில எல்லையோர மாவட்டங்களில் வசிக்கும் சிலர் தேங்காய் எண்ணெயை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவதால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    ஆனாலும் இதுகுறித்த கொள்கை முடிவை அரசு தான் எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்களின் ஆய்வறிக்கைகள் கிடைத்த பிறகு அரசு இதில் இறுதி முடிவை அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×