search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணியிடை நீக்கத்தை எதிர்த்து டாக்டர் சுப்பையா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
    X

    பணியிடை நீக்கத்தை எதிர்த்து டாக்டர் சுப்பையா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

    • சுப்பையாவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி.
    • சுப்பையாவுக்கு எதிராக புகார்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன.

    சென்னை:

    சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா சண்முகத்திற்கு எதிராக பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில், சுப்பையா, காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே, அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

    இந்த உத்தரவுகளை எதிர்த்து சுப்பையா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது சுப்பையா சார்பில் ஆஜரான வக்கீல், செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் யாரோ கேமரா வைத்து படம் பிடித்து உள்ளனர். இது தொடர்பாக சுப்பையா போலீசில் புகார் அளித்துள்ளார்.

    தற்போது வெளியான வீடியோவில் இருப்பது சுப்பையா இல்லை. அவருக்கு எதிரான புகாரின் மீது விசாரணை நடத்திய விசாகா குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

    அரசுத்தரப்பு வக்கீல் சுப்பையாவுக்கு எதிராக இது போன்ற புகார்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன. இவரை போன்ற நபர்களுக்கு ஐகோர்ட்டு கருணைக் காட்டக்கூடாது.

    பெண் டாக்டர் ஒருவர் அளித்த புகார் அடிப்படையிலேயே சுப்பையா பணியிட மாற்றம் பின்னர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்று வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுப்பையாவின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி பிறப்பித்தார். அதில் சுப்பையாவின் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளார்.

    Next Story
    ×