search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடந்த மாதம் நிறைவேறிய சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
    X

    கடந்த மாதம் நிறைவேறிய சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

    • 14 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
    • மசோதாக்களில் அவர் கையெழுத்திட்டதும் அது சட்டமாகி விடும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள் அனைத்தும் கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

    அந்த மசோதாக்களில் அவர் கையெழுத்திட்டதும் அது சட்டமாகி விடும். ஆனால் கடந்த சில வருடங் களாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களில் ஒருசில மசோதாக்களில் கையெழுத் திடாமல் விளக்கம் கேட்டு அரசுக்கே திருப்பி அனுப்பிய சம்பவமும் அரங்கேறியது.

    இதனால் கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் இந்த பிரச்சனை கோர்ட்டு வரை சென்றது.

    இந்த சூழலில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கவர்னர் நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மொத்தம் 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த 14 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி இப்போது ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்திய மசோதா, ஊரக உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது அப்பகுதியில் வரும் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கான சட்ட திருத்த மசோதா.

    சென்னையில் தனியார் வளாகம் அல்லது ஒரு தனியார் தெருவின் மிக அருகில் உள்ள இடத்தில் இருந்து 30 மீட்டர் தூரத்துக்குள் கழிவுநீரை வாரியத்தின் கழிவுநீர் பாதையில் வெளியேற்றுவதற்கு இணைப்பு பெறுவதை கட்டாயமாக்கும் திருத்த மசோதா, சென்னை மாநகர காவல் சட்டத்தை மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான சட்ட திருத்த மசோதா, உள்ளிட்ட 14 மசோதாக்களுக்கும் கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    Next Story
    ×