search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனம்பாக்கம்-தாம்பரம் இரும்புலியூர் வரை மேம்பாலம் அமைக்கவேண்டும்-இ.கருணாநிதி எம்.எல்.ஏ.
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மீனம்பாக்கம்-தாம்பரம் இரும்புலியூர் வரை மேம்பாலம் அமைக்கவேண்டும்-இ.கருணாநிதி எம்.எல்.ஏ.

    • சாலையை விரிவுபடுத்திட வேண்டும்.
    • ஊராட்சிக்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

    சென்னை:

    சட்டசபையில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது:-

    எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 3 லட்சம் உள்ளது. இது போதாது. ரூ.5 லட்சமாக உயர்த்தி தர வேண்டும். பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் சாலையை விரிவுபடுத்திட வேண்டும்.

    தாம்பரம் மாநகராட்சி பகுதிகளிலுள்ள பாதாள சாக்கடை திட்டங்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதை புதுப்பிக்க வேண்டும். 135 ஏக்கர் பரப்பளவில் உள்ள திருநீர்மலை ஏரி மிக பெரிய ஏரி. சென்னை சேத்துப் பட்டில் படகு குழாம் உள்ளது போன்று சென்னை புறநகர் பகுதியில் படகு குழாம் எதுவும் இல்லை. எனவே அதை திருநீர்மலை ஏரியில் அமைக்க வேண்டும்.

    அங்கு பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வகையில் மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும். திரிசூலம் ஊராட்சிக்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, மீனம்பாக்கம் முதல் இரும்புலியூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. பேசினார்.

    Next Story
    ×