என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது
    X

    பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது

    • உறவினர் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது நைசாக பேச்சு கொடுத்தார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துபட்டியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது32). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவரது உறவினர் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது நைசாக பேச்சு கொடுத்தார்.

    பின்னர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கூறி உள்ளார். அவர்கள் பெரியகுளம் தென்கரை போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர். பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி முனீஸ்வரனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×