search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நீட் தேர்வில் முறைகேடுக்கான சாத்திய கூறுகள் மிகக்குறைவு: சென்னை ஐ.ஐ.டி. அறிக்கையில் தகவல்
    X

    நீட் தேர்வில் முறைகேடுக்கான சாத்திய கூறுகள் மிகக்குறைவு: சென்னை ஐ.ஐ.டி. அறிக்கையில் தகவல்

    • சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.
    • பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டதே இதற்கு காரணம்.

    சென்னை:

    இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, போனஸ் மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் சர்ச்சையானது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. பீகார், குஜராத், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை நடத்தியதில் பலர் கைது செய்யப்பட்டனர்.

    நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளியின் முதல்வர், துணை முதல்வரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 8-ந்தேதி நடந்த விசாரணையின் போது, நீட் தேர்வின் புனிதத் தன்மை மீறப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் முழுமை யாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. சென்னை ஐ.ஐ.டி. தொழில்நுட்ப மதிப்பீடு, மதிப்பெண்கள் வினியோகம், நகரம் மற்றும் மையங்கள் வாரியாக ரேங்க் வினியோகம் போன்றவற் றின் தரவுகளை ஆய்வு மேற்கொண்டது.

    ஐ.ஐ.டி. சென்னை வழங்கிய அறிக்கையின்படி எந்த ஒரு பெரிய அளவிலான முறைகேடும் நடக்கவில்லை. எந்த அசாதாரணமும் இல்லை. மேலும் மோசடி காரணமாக பெரும்பாலான முறைகேடுகள், அதிக மதிப்பெண் பற்றிய எந்த ஆதாரமும் இல்லை.

    மதிப்பெண்களில் ஒட்டுமொத்த அதிகரிப்பு உள்ளது. குறிப்பாக 550 முதல் 720 வரை இந்த அதிகரிப்பு நகரங்கள் மற்றும் மையங்கள் முழுவதும் காணப்படுகிறது.

    பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டதே இதற்கு காரணம்.

    கூடுதலாக அதிக மதிப் பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்கள் பல நகரங்கள், பல மையங்களில் பரவி உள்ளனர். இது முறை கேடுக்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு என்பதை குறிக்கிறது.

    சென்னை ஐ.ஐ.டியின் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×