search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேன் மோதி காவலாளி பலி
    X

    வேன் மோதி காவலாளி பலி

    • சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த பழைய அக்ராவரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 55) தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று மதியம் வீட்டிற்கு செல்வதற்காக அக்ராவரம் -பெல் சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×