என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆபாச படங்களை காட்டி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பரோட்டா மாஸ்டர் கைது
- சிறுமி தனது தாயிடம் தெரிவித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த சிறுமி திருப்பூர் சைல்டு லைன் அமைப்பிடம் புகார் தெரிவித்தார்.
திருப்பூர்:
திருப்பூரை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 35). இவருக்கு 13 வயதான மகள் உள்ளார். திருப்பூரில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் மஞ்சுளாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் மஞ்சுளா தனது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் மஞ்சுளாவுக்கும், அந்த பகுதியை சேர்ந்த பரோட்டா மாஸ்டரான சிவகங்கையை சேர்ந்த சிவமுருகன் (44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுடன் மஞ்சுளாவின் மகளும் வசித்து வந்தார்.
இந்தநிலையில் இரவு நேரம் சிவக்குமார் மஞ்சுளாவுடன் உல்லாசமாக இருக்கும் போது அதனை செல்போனில் வீடியோ எடுக்குமாறு மஞ்சுளாவின் மகளிடம் சிவக்குமார் வற்புறுத்தி உள்ளார். மேலும் மஞ்சுளா வீட்டில் இல்லாத நேரத்தில் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து சிறுமியை சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சிவக்குமார் சிறுமியிடம் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த சிறுமி இது குறித்து திருப்பூர் சைல்டு லைன் அமைப்பிடம் புகார் தெரிவித்தார். அந்த அமைப்பினர் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். தாய் மஞ்சுளாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தாயின் கள்ளக்காதலன் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்