search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடபழனியில் பள்ளி அருகே புகையிலை விற்ற கடைக்கு சீல்
    X

    வடபழனியில் பள்ளி அருகே புகையிலை விற்ற கடைக்கு சீல்

    • தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்றதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபராதம் விதிக்கப்பட்டது.
    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதாசிவம் தலைமையில் வந்த அதிகாரிகள் ரகமதுல்லாவின் கடைக்கு சீல் வைத்தனர்.

    போரூர்:

    வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள அரசு பள்ளி அருகே கடை நடத்தி வருபவர் ரகமதுல்லா. இவர் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்றதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபராதம் விதிக்கப்பட்டது. எனினும் அவர் தொடர்ந்து குட்கா, புகையிலை விற்று வந்ததாக தெரிகிறது. இதையடுத்து வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு ஆகியோர் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் ரகமதுல்லா கடையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை கமிஷனருக்கு கடிதம் அனுப்பினர். இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதாசிவம் தலைமையில் வந்த அதிகாரிகள் ரகமதுல்லாவின் கடைக்கு சீல் வைத்தனர்.

    Next Story
    ×