என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சின்னமனூரில் கணவரை மிரட்ட தீக்குளித்த பெண் உடல் கருகி மரணம்
BySuresh K Jangir10 Dec 2022 6:04 AM GMT
- தனது கணவரை மிரட்டுவதற்காக சசி பிரபா தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப்போவதாக தெரிவித்தார்.
- எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீ பற்றிக் கொண்டது. பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் லுத்ரன் மிஷன் கோவில் தெருவைச் சேர்ந்த சரண்ராஜ் மனைவி சசி பிரபா (வயது 29). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த சரண்ராஜ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் சம்பவத்தன்று தனது கணவரை மிரட்டுவதற்காக சசி பிரபா தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப்போவதாக தெரிவித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீ பற்றிக் கொண்டது. பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த சசி பிரபா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X