search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வங்கி மேலாளரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
    X

    வங்கி மேலாளரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

    • வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்.
    • வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    போரூர்:

    வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். அதே பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 3 வாலிபர்கள் திடீரென சந்தோஷின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே விருகம்பாக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக சுற்றிய வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த கிச்சா என்கிற கிருஷ்ணகுமார் என்பதும் கூட்டாளிகளுடன் சேர்ந்து வங்கி மேலாளர் சந்தோஷிடம் செல்போன் பறித்து இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து கிச்சாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவனது கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×