search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை-பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத்:  நேரம் அறிவிப்பு
    X

    மதுரை-பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத்: நேரம் அறிவிப்பு

    • பிரதமர் மோடி 31ந்தேதி காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.
    • சென்னை சென்ட்ரலில் தொடக்க விழா நடைபெற உள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையேயும் மதுரை-பெங்களூர் இடையேயும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 31ந்தேதி காணொலிக்காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார். சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த வந்தேபாரத் ரெயில் சேவை தொடக்க விழா நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில், இந்த இரண்டு ரெயில்கள் இயக்கப்படும் நேரம், நின்று செல்லும் ரெயில் நிலையங்கள் விவரம் உள்பட பல்வேறு தகவல்களை ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

    சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே வந்தேபாரத் ரெயில் சேவை (20627-20678) வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும். இந்தரெயில் எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலை அதேநாள் மதி யம் 1.50 மணிக்கு அடையும்.

    மறுமார்க்கமாக, இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

    இந்த ரெயில் தாம்பரம், விழுப்பு ரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 16 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன.

    மதுரை-பெங்களூரு கண்டோன்மெண்ட் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை (20671-20672) வாரத்தில் செவ் வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த ரெயில் மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப் பட்டு, அதே நாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை அடையும்.

    மறுமார்க்கமாக, இந்த ரெயில் பெங்களூரு கண் டோன்மெண்ட்-ல் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 9.45 மணிக்கு மதுரையை சென்றடையும்.

    இந்தரெயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

    இவ்வாறு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×