search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயநிதியை துணை முதலமைச்சராக்கினால் என்ன தவறு? கே.பாலகிருஷ்ணன்
    X

    உதயநிதியை துணை முதலமைச்சராக்கினால் என்ன தவறு? கே.பாலகிருஷ்ணன்

    • உதயநிதியும், எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக அனுபவம் பெற்றுள்ளார்.
    • தி.மு.க.வை பொறுத்தவரையில் தனி நபர் முடிவெடுப்பதில்லை.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கை தி.மு.க.வில் வலுப்பெற்று வருகிறது.

    இதனால் உதயநிதிக்கு எப்போது வேண்டுமானாலும் துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்கப் படலாம் என்கிற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த அவர் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. இன்னும் பழுக்க வில்லை என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் உதயநிதி துணை முதலமைச்சர் ஆவதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

    உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்குவதன் மூலம் தி.மு.க. ஒரு குடும்ப கட்சி என்கிற பாரதீய ஜனதாவின் குற்றச்சாட்டு சரிதான் என்றாகி விடாதா? என்கிற கேள்விக்கு கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள பதில் வருமாறு:-

    முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினை தனது மகன் என்பதற்காக கருணாநிதி தேர்வு செய்து விடவில்லை. அவர் 50 ஆண்டு காலம் கட்சி பணியாற்றியவர் ஆவார். தி.மு.க.வில் இளைஞர் அணியை தொடங்கி பொருளாளராகவும், செயல் தலைவராகவும் மு.க.ஸ்டாலின் பணியாற்றியுள்ளார். இப்படி பல்வேறு பதவிகளை வகித்த அவருக்கு நிர்வாகத்திலும் நல்ல அனுபவம் இருந்தது. அதனால்தான் அவர் தேர்வு செய்யப் பட்டார்.

    அதே போன்று உதயநிதியும், எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக அனுபவம் பெற்றுள்ளார். அப்படிப்பட்டவரை துணை முதல்-அமைச்சராக கட்சி தேர்வு செய்வதில் என்ன தவறு உள்ளது.

    தி.மு.க.வை பொறுத்தவரையில் தனி நபர் முடிவெடுப்பதில்லை. கட்சியின் மூத்த நிர்வாகி களின் ஆலோசனைக்கு பிறகே முடிவுகள் எடுக்கப் பட்டு அறிவிக்கப்படு கின்றன.

    அந்த வகையில்தான் உதயநிதியை துணை முதல்-அமைச்சராக்க மூத்த தலைவர்கள் விரும்பி இருக்கலாம். இதனை குடும்ப அரசியல் என்று எப்படி சொல்ல முடியும். எந்த கட்சியாக இருந்தாலும் குடும்பத்தின் சாயல் இருப்பது இயல்புதான்.

    தலைவர் பதவியில் மட்டுமல்ல மாவட்ட செயலாளர், மாநில செயலாளர் பதவி களிலும் 2 தலைமுறைகளை சேர்ந்தவர்கள் இருந்து கொண்டுதானே உள்ளனர்.

    இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    Next Story
    ×