என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரியகுளம் அருகே கணவர் தாக்கியதால் கலைந்த மனைவியின் கரு
- 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுவாதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்தார்.
- பரிசோதனை செய்த டாக்டர்கள் கரு கலைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் அருகே எ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் சுந்தர்(31). அதேபகுதியை சேர்ந்த சுவாதி என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுந்தரை 2-வது திருமணம் செய்து கொண்டார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுவாதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்தார்.
மேலும் மதுகுடித்துவந்து சுவாதி மற்றும் அவரது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். சம்பவத்தன்றும் இதேபோல் அவர் சுவாதியை தாக்கியதால் படுகாயமடைந்தார். இந்நிலையில் திடீரென வயிற்றுவலி அதிகமாகவே சுவாதியை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கரு கலைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் சுவாதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்