search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம் அருகே கணவர் தாக்கியதால் கலைந்த மனைவியின் கரு
    X

    பெரியகுளம் அருகே கணவர் தாக்கியதால் கலைந்த மனைவியின் கரு

    • 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுவாதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்தார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் கரு கலைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் அருகே எ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் சுந்தர்(31). அதேபகுதியை சேர்ந்த சுவாதி என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுந்தரை 2-வது திருமணம் செய்து கொண்டார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுவாதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்தார்.

    மேலும் மதுகுடித்துவந்து சுவாதி மற்றும் அவரது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். சம்பவத்தன்றும் இதேபோல் அவர் சுவாதியை தாக்கியதால் படுகாயமடைந்தார். இந்நிலையில் திடீரென வயிற்றுவலி அதிகமாகவே சுவாதியை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கரு கலைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் சுவாதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

    Next Story
    ×