search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது
    X

    கூடுதல் விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது

      திருப்பூர்:

      திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் முறைகேடாக மது விற்பனை மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

      இந்தநிலையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுஜாதா உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீசார் மாநகர மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி , சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்மணி ஆகியோரது தலைமையிலான போலீசார் மங்களம் சாலையில் வாகண சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடுவம்பாளையம் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் மதுபான பாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

      மதுவிலக்கு போலீசாரின் விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு (26) மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாபு (55) இருவரும் வஞ்சிபாளையம் ரத்தினபுரி கார்டன் அருகே உள்ள மதுபான கடையில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து இடுவம்பாளையம் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சரக்கு ஆட்டோவில் இருந்த 24 பெட்டிகளில் 1152 மதுபான பாட்டில்கள் மற்றும் 8 பெட்டிகளில் இருந்த 92 பீர் பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். முறைகேடக மது பாட்டில்களை கொண்டு சென்ற கருப்பு மற்றும் பாபுவை கைது செய்தனர்.

      இன்று மிலாது நபி பண்டிகையின் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்புதிருந்த நிலையில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக மொத்தமாக வாங்கி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

      Next Story
      ×