search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட முதல்-மந்திரிகளுடன் அமித்ஷா நாளை ஆலோசனை
    X

    நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட முதல்-மந்திரிகளுடன் அமித்ஷா நாளை ஆலோசனை

    • 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    • 5 மத்திய மந்திரிகளும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    சத்தீஷ்கர் மாநிலத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரர்களின் அதிரடி வேட்டையில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநில முதல்-மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (7-ந்தேதி) ஆலோசனை நடத்துகிறார்.

    டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

    ஆந்திரா, பீகார், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, ஒடிசா, மராட்டியம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    5 மத்திய மந்திரிகளும் இதில் கலந்து கொள்கிறார்கள். துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மத்திய மாநில அரசுகளின் ஆயுதபடை உயர் போலீஸ் அதிகாரிகளும் இதில் பங்கேற்கிறார்கள்.

    கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி இந்த கூட்டம் நடைபெற்றது. நக்சலைட்டுகளின் பாதிப்பு 86 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக குறைந்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×