search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் மிளகாய் பஜ்ஜிக்கு வந்த சோதனை
    X

    ஆந்திராவில் மிளகாய் பஜ்ஜிக்கு வந்த சோதனை

    • கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்தில் மழை பெய்யாததால் விளைச்சல் குறைந்தது.
    • பஜ்ஜி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் குண்டூர், ஆவணி கட்டா, நாகை லங்கா பகுதிகளில் பல்வேறு வகையான மிளகாய் பயிரிடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த மிளகாய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்தில் மழை பெய்யாததால் விளைச்சல் குறைந்தது. மேலும் வெயில் அதிகரிப்பால் பச்சை மிளகாய் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக பஜ்ஜி செய்ய பயன்படுத்த கூடிய மிளகாய் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது.

    இந்த வகை மிளகாய் கிலோ ரூ.115 வரை விற்பனை செய்யப்படுகிறது. வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.74-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதனால் இல்லத்தரசிகள் மற்றும் பஜ்ஜி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×