search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏர்போர்ட்டிற்கு வெளியே காத்திருந்து முன்னாள் மனைவியின் காதலனை கொடூரமாக கொலை செய்த நபர்
    X

    ஏர்போர்ட்டிற்கு வெளியே காத்திருந்து முன்னாள் மனைவியின் காதலனை கொடூரமாக கொலை செய்த நபர்

    • ஆத்திரத்தில் இருந்த குற்றவாளி, விமான நிலைய ஊழியரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
    • சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர் ஒருவர் கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொலை செய்யப்பட்டவருடன் குற்றவாளியின் மனைவிக்கு ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த குற்றவாளி, விமான நிலைய ஊழியரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

    இதற்காக ஒரு பையில் கத்தியை வாங்கி மறைத்து வைத்துக்கொண்டு பஸ்சில் விமான நிலையத்திற்கு சென்ற அவர், அந்த வாலிபர் வெளியே வரும்வரை காத்திருந்தார். கொலையானவர் விமான நிலையத்தில் ட்ரோலி ஆபரேட்டர் வேலை பார்த்து வந்தார். அவர் வேலை முடிந்து வெளியே வந்ததும் குற்றவாளி தனது திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×