search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள் - பீகாரில் பரபரப்பு
    X

    அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள் - பீகாரில் பரபரப்பு

    • புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது.
    • இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தரமற்ற பொருட்களை கொண்டு பாலம் கட்டப்பட்டதால் தான் இடிந்து விழுந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், பீகார் மாநிலத்தில் இன்னொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதனால் இரு கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்தாண்டு பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×