search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    இளம்பெண்ணை கொன்று 30 துண்டுகளாக வெட்டிய கொடூரம்: துப்பு துலக்கும் போலீசார்
    X

    இளம்பெண்ணை கொன்று 30 துண்டுகளாக வெட்டிய கொடூரம்: துப்பு துலக்கும் போலீசார்

    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்பு.
    • வாலிபரை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    வடமாநிலத்தை சேர்ந்தவர் ஹேமந்த் தாஸ் இவருக்கும் மகாலட்சுமி (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இவர்கள் கர்நாடக மாநிலம் நெலமங்களா பகுதியில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து மகாலட்சுமி பெங்களூரு வயாலிகாவல் அருகே உள்ள விநாயகர் நகர் பைப் லைன் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இவர் இங்கிருந்து பெங்களூரில் உள்ள ஒரு மாலில் வேலை பார்த்து வந்தார். இவரை தினமும் ஒரு வாலிபர் வேலைக்கு அழைத்து சென்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதியிலிருந்து மகாலட்சுமி வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவரது செல்போனுக்கு உறவினர்கள், நண்பர்கள் பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் வரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் சகோதரி நெலமங்காலவில் இருந்து மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு நேற்று வந்தனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதையடுத்து அவர்கள் பக்கத்து வீட்டினரிடம் கேட்டபோது மகாலட்சுமி நடமாட்டம் வெளியே இல்லை என்றும். அவரது விட்டில் இருந்து கடந்த 2 நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து மகாலட்சுமியின் சகோதரி வயாலிகாவல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீடு முழுவதும் துர்நாற்றம் வீசிய நிலையில் மகாலட்சுமியை போலீசார் பல இடங்களில் தேடி பார்த்தனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்த போது அங்கு மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு அவரது உடல் 30 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் உடல் பாகங்ககளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இருந்த கைரேகைகளையும் தடயவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    இதற்கிடையே மகாலட்சுமியை தினமும் வேலைக்கு அழைத்து சென்று வந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் யார்? என்றும் அவரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கணவரை பிரிந்து வாழ்ந்த மகாலட்சுமி தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரை தினமும் ஆண் நண்பர் ஒருவர் வேலைக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதியிலிருந்து மகாலட்சுமி வெளியே வரவில்லை. மேலும் அந்த நபரும் காணவில்லை எனவே காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு என்ன விவகாரம் என்று தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியின் செல்போன் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக அவர் யாரிடம் பேசினார். எவ்வளவு நேரம் பேசினார். அடிக்கடி அவரை தொடர்பு கொண்டு பேசியது யார்? என்றும் விசாரணை நடக்கிறது.

    மேலும் மகாலட்சுமி வீட்டிற்கு வந்து சென்ற வாலிபரை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மகாலட்சுமியை கடந்த 10 நாட்களுக்கு முன்பே கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் உடல் பாகங்கள் அழுகி புழு வைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×