search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பட்ஜெட் ஹைலைட்ஸ்: வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்
    X

    பட்ஜெட் ஹைலைட்ஸ்: வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட் மீது உரையாற்றி வருகிறார்.
    • கிசான் கிரெடிட் கார்ட் 5 மாநிலங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

    அவரது உரையில்,

    பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது மக்கள் மீண்டும் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. இந்திய மக்கள் சாதி, மத வேறுபாடின்றி வளர்ச்சி அடைய பிரதமர் மோடி உழைத்து வருகிறார்.

    ✵இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடுகளை அளிக்க ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ✵நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் 4 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம்

    ✵பிரதமரின் இலவச உணவு வழங்கும் கரீப் கல்யாண் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    ✵வேலை வாய்ப்புகளை பெருக்க 9 வகையான முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    ✵வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு கவனம் செலுத்தப் படும்

    ✵பருவநிலையை தாக்குப்பிடித்து வளரும் 102 வகையான புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது- நிர்மலா சீதாராமன்

    ✵அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு தயார் செய்வோம்...

    ✵மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

    ✵கிசான் கிரெடிட் கார்ட் 5 மாநிலங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

    ✵நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு MSP உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ✵உயர்கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்

    ✵பீகாரில் புதிய விமான நிலையம், சாலைகள் அமைக்கப்படும். கயாவில் புதிய தொழில்வழித்தடம் அமைக்கப்படும்.

    ✵20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கும் திட்டம்...

    ✵நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும்.

    ✵ஆந்திராவை பிரிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×