search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகனின் திருமணம்.. மகாராஷ்டிரா முதல்வருக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கிய முகேஷ் அம்பானி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மகனின் திருமணம்.. மகாராஷ்டிரா முதல்வருக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கிய முகேஷ் அம்பானி

    • இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி உலகின் பல்வேறு இடங்களில் நடந்தது.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.



    இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி உலகின் பல்வேறு இடங்களில் நடந்தது.

    இந்நிலையில் இன்று காலை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தனர். ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கான அழைப்பிதழை கொடுத்தனர்.

    Next Story
    ×