search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    Elephants
    X

    மைசூர் அரண்மனையில் சண்டையிட்டு கொண்ட யானைகள் - வீடியோ வைரல்

    • தசரா பண்டிகையோட்டி மைசூர் அரண்மனைக்கு 2 யானைகள் கொண்டு வரப்பட்டன.
    • தனஞ்சயா என்ற யானை திடீரென கன்ஜன் யானையுடன் சண்டையிட தொடங்கியது.

    கர்நாடகாவில் உள்ள மைசூர் அரண்மனையில் 2 யானைகள் சண்டையிட்டு கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அடுத்த மாதம் இந்தியா முழுவதும் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தசரா பண்டிகையோட்டி மைசூர் அரண்மனைக்கு தனஞ்சயா , கஞ்சன் என்ற 2 தசரா யானைகள் கொண்டு வரப்பட்டன

    நேற்று இரவு தனஞ்சயா என்ற யானை திடீரென கன்ஜன் யானையுடன் சண்டையிட தொடங்கியது. 2 யானைகளும் மைசூர் அரண்மனை வளாகத்தை சுற்றி வந்து சாலைக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    Next Story
    ×