search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எர்ணாகுளத்தில் உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் எலிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு
    X

    எர்ணாகுளத்தில் உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் எலிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு

    • டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்சசல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவின.
    • காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கிய நிலையில், அதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சல்களும், தொற்று நோய்களும் பரவ தொடங்கியது. பருவ மழை பெய்ய தொடங்கிய பிறகு நோய் பாதிப்புகள் அதிகரித்தன. அங்கு டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்சசல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவின.

    மேலும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட ஏராளமான தொற்று நோய்களும் வேகமாக பரவியபடி இருக்கிறது. அங்கும் தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சல் பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று நோய்களின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எலி காய்ச்சலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் ஒருமனயூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு என்ற வாலிபர் இறந்திருந்த நிலையில் தற்போது ஜிம் பயிற்சியாளர் ஒருவரும் எலி காய்ச்சலுக்கு பலியாகி இருக்கிறார்.

    குருவாயூர் அருகே உள்ள மம்மியூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ஜார்ஜ்(வயது62). கோட்டப்பாடி உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்த அவர், கடந்த வாரம் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×