என் மலர்tooltip icon

    இந்தியா

    தொங்கு பால விபத்தில் என் குடும்பத்தினர் 12 பேரை இழந்துவிட்டேன்: பா.ஜ.க. எம்.பி. கண்ணீர்
    X

    தொங்கு பால விபத்தில் என் குடும்பத்தினர் 12 பேரை இழந்துவிட்டேன்: பா.ஜ.க. எம்.பி. கண்ணீர்

    • இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 140-ஐ கடந்துள்ளது.
    • 100-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஆமதாபாத்

    குஜராத்தில் மோர்பி நகரத்தில் தொங்குபாலம் அறுந்து விழுந்து நேரிட்ட கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 140-ஐ கடந்துள்ளது.

    100-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த துயர சம்பவத்தில் ராஜ்கோட் தொகுதி பா.ஜ.க. எம்.பி. மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியாவின் குடும்ப உறுப்பினர்கள் 12 பேர் பலியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதுபற்றி அவர் கூறும்போது, "இந்த விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 12 பேரை நான் இழந்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் எனது சகோதரி குடும்பத்தினர்" என கண்ணீருடன் தெரிவித்தார்.

    Next Story
    ×