search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Gujarat Floods
    X

    குஜராத்தில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய வெளிநாட்டினர் புல்டோசரில் மீட்பு - வீடியோ

    • குஜராத் மாநிலத்தில் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புப்படையினர் மீட்டு வருகின்றனர்.

    குஜராத் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் மாநிலத்தில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புப்படையினர் மீட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், வாதோராவில் கனமழையில் சிக்கி 6 வெளிநாட்டினர் தவித்து வருவதாக மீட்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வெள்ளம் நிறைந்த சாலையில் வெளிநாட்டினர் 6 பேரையும் புல்டோசரில் அழைத்து சென்று மீட்புப்படையினர் மீட்டனர்.

    வெளிநாட்டினர் புல்டோசரில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

    குஜராத் மாநிலத்தில் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×