search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹிண்டன்பர்க்: மோதானி மோசடி - காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம்
    X

    ஹிண்டன்பர்க்: 'மோதானி மோசடி' - காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம்

    • அதானியின் மெகா ஊழல் குறித்த விசாரணை செய்யவேண்டும். இந்த ஊழலில் பிரதமரும் சம்பந்தப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் தெரிவித்தது
    • 'மோதானி [மோடி- அதானி] மெகா மோசடி பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது'

    அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாகக் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது. இது இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. எதிர்க்கட்சிகள் அதானி மற்றும் பிரதமர் மோடியின் நட்படை விமர்சிக்கத்தொடங்கின.

    இந்நிலையில் அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஆர்வம் காட்டவில்லை என ஹிண்டன்பா்க் மீண்டும் குற்றச்சாட்டைக் கூறியுள்ளது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.

    செபி தலைவர் மாதபி பூரி புச்சுடன் எங்களுக்கு எந்த வணிக உறவும் இல்லை என்று அதானி நிறுவனமும், ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் மாதபி பூரியும் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், செபி தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் உள்ள அமலாக்கத்துறை அலுவலத்தை முற்றுகையிட்டு நாடு தழுவிய போராட்டத்தை இன்று [ஆகஸ்ட் 22] நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

    அதானியின் மெகா ஊழல் குறித்த விசாரணை செய்யவேண்டும். இந்த ஊழலில் பிரதமரும் சம்பந்தப்பட்டுள்ளார். பங்குச் சந்தை ஒழுங்குமுறை இப்போது கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களை முன்னிறுத்தி தான் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்க் கே.சி வேணுகோபால் தெரிவித்திருந்தார்.

    மேலும், செபி தலைவர் மாதபி பூரி புச் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், அவர் மீதமான குற்றச்சாட்டை விசாரிக்கப் பாராளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று இந்த போராட்டத்தைக் காங்கிரஸ் நடத்த உள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, நாடு முழுவதிலும் 20 மாநாடுகளை நடத்தி, மோதானி [மோடி- அதானி] மெகா மோசடி மூலம் கோடிக்கணக்கான சிறு முதலீட்டாலர்களை ஏமாற்றியும், பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும் நடந்த ஊழலை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×