search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    நான் ஏன் முதலமைச்சராகக் கூடாது?:  கர்நாடக முன்னாள் மந்திரி தடாலடி
    X

    நான் ஏன் முதலமைச்சராகக் கூடாது?: கர்நாடக முன்னாள் மந்திரி தடாலடி

    • நாகேந்திரா மீது 18 கிரிமினல் வழக்குள் உள்ளதாக ஜனார்த்தன ரெட்டி விமர்சனம்.
    • 100 வழக்குகள் உள்ளவர்கள் முதல்வரான சம்பவம் நடந்துள்ளதாக நாகேந்திரா பதிலடி.

    கர்நாடக மாநில மந்திரியாக இருந்தவர் நாகேந்திரா. வால்மீகி கார்ப்பரேசன் மோசடி வழக்கில், மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் சிறைக்குச் சென்ற அவர் நேற்று ஜாமினில் விடுதலையானார். ஜாமினில வெளியே வந்த நாகேந்திரா, தனக்கு கர்நாடக மாநில முதல்வராகும் தகுதி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    நாகேந்திரா மீது 18 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஜனார்த்தன ரெட்டி எம்.எல்.ஏ. கூறியிருந்த நிலையில் "100 கிரிமினல் வழக்குகள் உள்ளவர் முதலமைச்சராகிய சம்பவம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    89.63 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டு காரணமாக நாகேந்திரா தனது பழங்குடியினர் நலத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறை அவரை கைது செய்த நிலையில் சுமார் மூன்றரை மாதங்கள் கழித்து நேற்று ஜாமினில் வெளியே வந்தார்.

    தன்மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாகேந்திரா கூறுகையில் "வெறும் 18 வழக்குகள் அல்ல. 100 வழக்குகள் உள்ளவர்கள் முதல்வராகி இருக்கிறாரக்ள். வரும் நாட்களில் எனக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. நான் காங்கிரசுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தால், நான் ஏன் முதலமைச்சராக ஆகக்கூடாது?. என்னைப் போன்ற சாதாரண உழைப்பாளியை காங்கிரஸ் அமைச்சராக்கவில்லையா? சாதாரணவர்களையும் கவுரவிக்கும் பாரம்பரியம் காங்கிரசுக்கு உண்டு" என்றார்.

    Next Story
    ×