search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    வடகிழக்கு பருவமழை 15-ந் தேதி தொடக்கம்- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    வடகிழக்கு பருவமழை 15-ந் தேதி தொடக்கம்- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

    • மழை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.
    • தமிழகத்தின் வட பகுதிகளில் இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்பு.

    புதுடெல்லி:

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும், அக்டோபர் 4-வது வாரத்தில் மழை அளவு அதிகரிக்கும், 3 மாதங்களுக்கு மழை இருக்கும் என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் வருகிற 15-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை கேரளா, தமிழகம்,தெற்கு கர்நாடகா, ராயலசீமா, ஆந்திரப் பிரதேசத்தில் இயல்பைவிட மழை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் வட பகுதிகளில் இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

    Next Story
    ×