என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிதாக 1,132 பேருக்கு கொரோனா தொற்று- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு
    X

    புதிதாக 1,132 பேருக்கு கொரோனா தொற்று- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு

    • கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,479 பேர் மீண்டுள்ளனர்.
    • கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 15 ஆயிரத்து 240 ஆக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பு நேற்று 1,082 ஆக இருந்தது. இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,132 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 60 ஆயிரத்து 579 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரத்தில் 3, கர்நாடகா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம், டெல்லி, குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என 9 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 5-ஐ கணக்கில் கொண்டு வந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,500 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,479 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 15 ஆயிரத்து 240 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 14,839 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 361 குறைவு ஆகும்.

    Next Story
    ×