search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கன்னட நடிகை டீப் பேக் வீடியோ வெளியாகி பரபரப்பு- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கன்னட நடிகை "டீப் பேக்" வீடியோ வெளியாகி பரபரப்பு- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    • கன்னட சின்னத்திரை வைஷ்ணவி கவுடா தொடர்பான ஒரு 'டீப் பேக்' ஆபாச வீடியோ வெளியாகி உள்ளது.
    • பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப் ஆகியோரின் முகத்தை பயன்படுத்தி 'டீப் பேக்' ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    இந்தநிலையில், கன்னட சின்னத்திரை வைஷ்ணவி கவுடா தொடர்பான ஒரு 'டீப் பேக்' ஆபாச வீடியோ வெளியாகி உள்ளது. அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவரது புகைப்படங்களை மர்ம நபர்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.

    அவற்றைப் பார்த்த நடிகை வைஷ்ணவி கவுடா அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுபற்றி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது கன்னட சின்னத்திரை நடிகைகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×