search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசு அதிகாரிகளின் வீடுகளில் சிக்கிய நகை-பணம் எவ்வளவு?- லோக் ஆயுக்தா விளக்கம்
    X

    அரசு அதிகாரிகளின் வீடுகளில் சிக்கிய நகை-பணம் எவ்வளவு?- லோக் ஆயுக்தா விளக்கம்

    • அதிகாரி நஞ்சுண்டப்பா வீட்டில் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், ரூ.56 லட்சத்திற்கு தங்க நகைகள் சிக்கியது.
    • கலபுரகியை சேர்ந்த அதிகாரியான ஜெகன்நாத்திற்கு ரூ.4 கோடியே 55 லட்சத்திற்கு சொத்துகள் உள்ளன.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் நேற்று 8 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். இதுதொடர்பாக லோக் ஆயுக்தா போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அதிகாரி நஞ்சுண்டப்பா வீட்டில் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், ரூ.56 லட்சத்திற்கு தங்க நகைகள் சிக்கியது. அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.8 கோடியே 46 லட்சத்து 22 ஆயிரம் ஆகும்.

    பெங்களூருவை சேர்ந்த அதிகாரி கல்லேசப்பா வீட்டில் ரூ.32 லட்சத்து 92 ஆயிரம் ரொக்கம், ரூ.16 லட்சத்து 10 ஆயிரத்திற்கு தங்க நகைகள் சிக்கி இருந்தது. அவரது சொத்து மதிப்பு ரூ.6 கோடியே 50 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதுபோல், மின்வாரிய என்ஜினீயரான நாகராஜின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 18 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். கலபுரகியை சேர்ந்த அதிகாரியான ஜெகன்நாத்திற்கு ரூ.4 கோடியே 55 லட்சத்திற்கு சொத்துகள் உள்ளன.

    தாவணகெரேயை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான டாக்டர் நாகராஜிக்கு ரூ.6 கோடியே 14 லட்சத்து 58 ஆயிரத்திற்கு நகை, பணம், வீடுகள், நிலம் உள்ளிட்ட சொத்துகள் இருக்கிறது. இதுபோல், டாக்டர் ஜெகதீசுக்கு ரூ.3 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான சொத்துகளும், பாகல்கோட்டையை சேர்ந்த அரசுஅதிகாரி மல்லேஷ் என்ற மல்லப்பாவின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 92 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். விஜயாப்புராவை சேர்ந்த முதல்நிலை ஊழியரான சிவானந்த சிவசங்கரின் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 64 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.சோதனைக்கு உள்ளான 8 அரசு அதிகாரிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.36 கோடியே 53 லட்சத்து 5 ஆயிரத்து 737 ஆகும். அவர்களது வீடுகளில் இருந்து ரூ.64 லட்சத்து 78 ஆயிரம் ரொக்கம், ரூ.3 கோடியே 73 லட்சத்து 71 ஆயரத்திற்கு தங்க, வெள்ளி நகைகள் சிக்கியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×