search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பகுஜன் சமாஜ் கட்சியை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை-மாயாவதி வருத்தம்
    X

    பகுஜன் சமாஜ் கட்சியை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை-மாயாவதி வருத்தம்

    • அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய முடிவுகளை ஆய்வு செய்வோம்.
    • பகுஜன் சமாஜ் கட்சியில் முஸ்லிம்கள் முக்கிய அங்கமாவர்.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அள வுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தோல்வி அடைந்தது. கடந்த 2019 தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி இந்த முறை தனித்துப் போட்டியிட்டு ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 35 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட வாய்ப்பளித் திருந்தது.

    இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து மாயாவதி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கட்சியின் நலன் கருதி அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய முடிவுகளை ஆய்வு செய்வோம். தலித் மக்கள் முக்கியமாக ஜாதவ் பிரிவினர் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக அளவில் வாக்களித்துள்ளனர். அவர்க ளுக்கு நன்றி.

    அதே நேரத்தில் முஸ்லிம்கள் பகுஜன் சமாஜ் கட்சியைப் புரிந்துகொண்டு வாக்களிக்கத் தவறியது வருத்தம் அளிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியில் முஸ்லிம்கள் முக்கிய அங்கமாவர்.

    இந்த மக்களவைத் தேர்த லில் மட்டுமின்றி இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்க ளிலும் முஸ்லிம் களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அதிக முஸ்லிம் வேட்பாளர்களை பகுஜன் சமாஜ் நிறுத்தியது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தோல்வியைச் சந்தித்துள் ளது என்றார்.

    Next Story
    ×