search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தலில் கல்வியறிவு இல்லாதவர்களை புறக்கணித்த மக்கள்
    X

    பாராளுமன்ற தேர்தலில் கல்வியறிவு இல்லாதவர்களை புறக்கணித்த மக்கள்

    • வெற்றி பெற்ற 105 வேட்பாளர்களில் சுமார் 19 சதவீதத்தினர் 5 மற்றும் 12-ம் வகுப்புக்கு இடைப்பட்ட கல்வித்தகுதிகளை பெற்றவர்கள்.
    • 34 வேட்பாளர்கள் 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள், 65 பேர் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.

    ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையின்படி,

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கல்வியறிவு இல்லை என்று குறிப்பிட்டிருந்த 121 வேட்பாளர்களும் தோல்வியடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்களுக்கு விவசாயம் மற்றும் சமூகப்பணியை முக்கிய தொழில்களாக இருந்தன.

    வெற்றி பெற்ற 105 வேட்பாளர்களில் சுமார் 19 சதவீதத்தினர் 5 மற்றும் 12-ம் வகுப்புக்கு இடைப்பட்ட கல்வித்தகுதிகளை பெற்றவர்கள். வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 2 பேர் 5-ம் வகுப்பு வரை படித்தவர்கள், 2 பேர் 8-ம் வகுப்பு வரை படித்தவர்கள்.

    தேர்தலில் வெற்றி பெற்ற 420 வேட்பாளர்களில் 77 சதவீதத்தினர் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அல்லது அதற்கு மேல் பட்டம் மேற்பட்டவர்கள். 17 பேர் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் ஒரு வெற்றி பெற்ற வேட்பாளர் வெறும் கல்வியறிவு பெற்றவர்.

    இதில் 34 வேட்பாளர்கள் 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள், 65 பேர் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கல்வியறிவு இல்லாத வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை மக்கள் தவிர்த்துள்ளது ஜனநாயக சீர்திருத்தங்களின் சங்கத்தின் அறிக்கையின்படி தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×