search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    PM  CARES? கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டத்தில் 51% விண்ணப்பங்கள் நிராகரிப்பு
    X

    PM CARES? கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டத்தில் 51% விண்ணப்பங்கள் நிராகரிப்பு

    • மொத்தம் 9,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 4,532 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது
    • பாஜக அரசின் PM CARES திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது

    உலகத்தை உலுக்கிய கொரோனா தொற்று இந்தியாவுக்கும் மறக்க முடியாத இழப்புகளை விட்டுச்சென்றது. மக்கள் கொத்துக்கொத்தாக இறந்த நிலையில் அனைவரையும் மொத்தமாக குழிதோண்டிப் புதைத்த அவலங்களும் நிகழ்ந்தது. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை யாரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு மக்கள் சாரை சாரையாக வரிசையில் காத்துக்கிடந்தனர்.

    ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்து நின்றன. இறப்புகளை தடுக்க முடியாமல் அரசாங்கங்கள் திணறியது. ஒருவாறாக தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பிய நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் நிலையோ இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. உலகின் வெவ்வேறு அரசாங்கங்கள், சமூக அமைப்புகள் அவர்களுக்கான முன்னெடுப்புகளை செய்து வந்த வண்ணம் உள்ளன.

    அந்த வகையில் கொரோனாவில் பெற்றோர்களை இழந்து அனாதைகளான குழந்தைகளுக்கான PM CARES திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 51 சதவீத விண்ணப்பங்களை மத்திய அரசு நிராகரிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக அரசு நன்கொடையும் வசூலித்தது. கல்வி உதவித் தொகை, 23 வயதை எட்டும் போது ரூ.10 லட்சம் நிதி, சுகாதார காப்பீடு மூலம் ஆகியவை இத்திட்டத்தின்மூலம் கிடைக்கும் பலன்கள் ஆகும். பி.எம். கேர்ஸ் திட்டம் மார்ச் 11, 2020 முதல் மே 05, 2023 வரை கொரோனா தோற்றால் பெற்றோர் அல்லது கார்டியனை இழந்தோர் இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

    கடந்த 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டிடத்தின் கீழ் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 9,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 4,532 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது மீதமுள்ள 4,781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    18 விண்ணப்பங்களுக்கான ஒப்புதல் நிலுவையில் உள்ளன. நிராகரிப்புக்கு எந் காரணமும் அரசு தரப்பில் தெரிவைக்கப்படவில்லை. முன்னதாகபாஜக அரசின் PM CARES திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதுகுறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×