search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி ஆபத்தானவர்.. நாட்டையே  அழித்துவிடுவார் - அதானி முறைகேடு கருத்துக்கு கங்கனா காட்டம்
    X

    ராகுல் காந்தி ஆபத்தானவர்.. நாட்டையே அழித்துவிடுவார் - அதானி முறைகேடு கருத்துக்கு கங்கனா காட்டம்

    • ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர்.
    • நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள்.

    புதுடெல்லி:

    ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி விமர்சித்து இருந்தார். செபியின் நேர்மை சமரசத்துக்கு உள்ளாகி இருக்கிறது என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

    இந்தநிலையில் ராகுல் காந்தி மிகவும் ஆபத்தானவர் என்று நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த நாட்டை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக இருக்கிறது.

    நமது பங்குச் சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பெர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்று இரவு உறுதியானது. இந்த நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க அவர் எல்லா முயற்சிகளையும் செய்கிறார்.

    நீங்கள் (ராகுல் காந்தி) வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள். நீங்கள் ஓர் அவமானம்.

    இவ்வாறு கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×