search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ராகுல் நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு: 250 தொண்டர்களும் கலந்து கொண்டனர்
    X

    ராகுல் நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு: 250 தொண்டர்களும் கலந்து கொண்டனர்

    • 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
    • நடைபயணத்தை நிறைவு செய்து விட்டு அனைவரும் சென்னை திரும்புகிறார்கள்.

    புதுடெல்லி:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாத யாத்திரையில் பங்கேற்க வரும்படி ராகுல்காந்தி அழைப்பு விடுத்து இருந்தார்.

    அவரது அழைப்பின் பேரில் பாத யாத்திரையில் டெல்லியில் கலந்து கொள்வதாக கமல் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட கமல்ஹாசன் காலை 10 மணியளவில் டெல்லி சென்றார்.

    இன்று மாலை ராகுல் காந்தியின் யாத்திரையில் கமல் கலந்து கொண்டார். பாத யாத்திரையில் கமலுடன் சுமார் 250 மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.

    மாநில நிர்வாகிகள் மவுரியா, தங்கவேல், முரளி அப்பாஸ், பொன்னுசாமி உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்து 20 பெண் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர். நடைபயணத்தை நிறைவு செய்து விட்டு அனைவரும் சென்னை திரும்புகிறார்கள்.

    Next Story
    ×