search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சரசரவென சரிந்த சென்செக்ஸ் புள்ளிகள்.. ரூ.15 லட்சம் கோடிக்கு துண்டு
    X

    சரசரவென சரிந்த சென்செக்ஸ் புள்ளிகள்.. ரூ.15 லட்சம் கோடிக்கு துண்டு

    • சென்செக்ஸ் 2400 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78,580.46 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
    • முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம் கோடி குறைந்துள்ளது

    மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையானது வாரத்தின் முதல் நாளிலேயே வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

    மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2400 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78,580.46 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.மேலும் தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிஃப்டி 698 புள்ளிகள் சரிந்து 24,019.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

    வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவை ஒப்பிடுகையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பு ரூ. 457.16 கோடியாக இருந்த நிலையில், அதில் சுமார் ரூ.15 லட்சம் கோடி குறைந்துள்ளது.

    உலகளவில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையிலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள்ள போர் பதற்றமும் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். மேலும் நிஃப்டி குறியீட்டில் டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிவுடன் வர்த்தகமானது.

    Next Story
    ×