search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தண்டவாளத்தில் டிக்-டாக் செய்த கல்லூரி மாணவர் ரெயில் மோதி படுகாயம்: சமூக வலைதளத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ
    X

    தண்டவாளம் அருகே டிக் டாக் செய்த மாணவர் மீது ரெயில் மோதிய காட்சி.


    தண்டவாளத்தில் டிக்-டாக் செய்த கல்லூரி மாணவர் ரெயில் மோதி படுகாயம்: சமூக வலைதளத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

    • மாணவர் மீது ரெயில் மோதும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்கிறது.
    • அசும்பாவித சம்பவங்களை தவிர்க்க தண்டவாளம் அருகே டிக் டாக் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், அனுமாகொண்டா மாவட்டம் காஜி பேட்டையை சேர்ந்தவர் அக்‌ஷய் (வயது 17). இவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காஜி பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனது நண்பர்களுடன் ரூல்ஸ் எனும் புதிய ஆப்பிள் டிக் டாக் செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது காஜி பேட்டையில் இருந்து பாலாஷா சென்ற பயணிகள் ரெயில் வேகமாக வந்தது. தண்டவாளம் அருகே அக்‌ஷய் நடந்து வரும்போது பின்புறம் ரெயில் வருவது போல் செல்போனில் படம் பிடித்தனர். தண்டவாளத்தின் அருகில் சென்ற அக்‌ஷய் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.







    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவர் மீது ரெயில் மோதும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்கிறது.

    எனவே அசும்பாவித சம்பவங்களை தவிர்க்க தண்டவாளம் அருகே டிக் டாக் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×