search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பச்சிளம் குழந்தையை கொன்று கழிவறையில் புதைத்த தாய் ஆண் நண்பருடன் கைது
    X

    பச்சிளம் குழந்தையை கொன்று கழிவறையில் புதைத்த தாய் ஆண் நண்பருடன் கைது

    • வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கேட்டவர்களிடம், தனது வயிற்றில் கட்டி இருப்பதாகவும், அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருக்கிறார்.
    • குழந்தையை கொன்று புதைக்க ஆஷாவுக்கு அவரது ஆண் நண்பரான ரதீஷ் என்பவர் உதவியுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பள்ளிப்புரம் ஊராட்சிக்குட்டப்ட பகுதியை சேர்ந்தவர் ஆஷா(வயது35). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஆஷா மீண்டும் கர்ப்பமானார்.

    ஆனால் தான் கர்ப்பமான விஷயத்தை கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறார். வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கேட்டவர்களிடம், தனது வயிற்றில் கட்டி இருப்பதாகவும், அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருக்கிறார்.

    இந்தநிலையில் அவர் பிரசவத்துக்காக கடந்த மாதம் 26-ந்தேதி சேர்தலாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு 26-ந்தேதி சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. அந்த ஆஸ்பத்திரியில் இருந்து 31-ந்தேதி ஆஷா டிஸ்சார்ஜ் ஆனார்.

    இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்த விவகாரத்தை அறிந்த சுகாதாரப் பணியாளர்கள், அவரது வீட்டுக்கு சென்றனர். பிறந்த குழந்தையை கேட்டபோது, அந்த குழந்தை அங்கு இல்லை. தனக்கு பிறந்த குழந்தையை, குழந்தை இல்லாத தம்பதிக்கு கொடுத்துவிட்டதாக ஆஷா கூறியிருக்கிறார்.

    ஆனால் அவர் கூறியது சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆகவே அதுபற்றி அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், ஆஷாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது தனக்கு பிறந்த குழந்தையை மூச்சு திணறடித்து கொன்று, கழிவறையில் புதைத்த அதிர்ச்சி தகவலை ஆஷா தெரிவித்தார். குழந்தையை கொன்று புதைக்க ஆஷாவுக்கு அவரது ஆண் நண்பரான ரதீஷ்(38) என்பவர் உதவியுள்ளார்.

    அவரது வீட்டின் கழிவறையில் தான் ஆஷாவின் குழந்தையை புதைத்துள்ளனர். இதனையறிந்த போலீசார், ஆஷா மற்றும் அவரது ஆண் நண்பர் ரதீஷ் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்பு கழிவறையில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பெற்ற குழந்தையை கொன்று புதைத்ததற்கான காரணம் குறித்து ஆஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை தாயே கொன்று புதைத்த சம்பவம் ஆலப்புழாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×