என் மலர்
இந்தியா

இந்தியா கூட்டணி கட்சிகள் ஊழலில் மூழ்கி கிடக்கின்றன- பிரதமர் மோடி
- இந்தியா கூட்டணி கமிஷனுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள்.
- பா.ஜனதா அரசு எந்த பாகுபாடும் இல்லாமல் செயல்படுகிறது.
லக்னோ:
பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-
பா.ஜனதாவுக்கு நாடு தான் முதலில் முக்கியம். நாங்கள் தேசிய கொள்கைக்காக பணியாற்றி வருகிறோம். ஏழை-எளியவர்களின் நல்வாழ்வுக்காக உழைத்து வருகிறோம். இதனால் மக்களின் நம்பிக்கையை பா.ஜனதா பெற்று இருக்கிறது. பா.ஜனதா அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தியா கூட்டணி கமிஷனுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த கூட்டணி கட்சிகள் ஊழலில் மூழ்கி கிடக்கின்றன.
மோடி அரசாங்கம், மக்கள் பணிக்காக உழைத்து கொண்டிருக்கிறது. காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யும் பணி நிறைவடைந்து விட்டது. காஷ்மீரில் கல்லெறிவோர் எறிந்த கற்களை கொண்டு வளர்ந்த ஜம்மு-காஷ்மீரை கட்ட தொடங்கினோம்.
பா.ஜனதா அரசு எந்த பாகுபாடும் இல்லாமல் செயல்படுகிறது. எங்கள் கொள்கைகள் அனைவரையும் சென்றடைய 10 ஆண்டுகள் உழைத்துள்ளோம். மக்கள் 100 சதவீதம் பயன் அடைய வேண்டும் என்பதே எங்களது மந்திரம். அதுதான் உண்மையான மதச்சார் பின்மை மற்றும் சமூக நீதி இப்பகுதி மகா பெண் சக்தியின் ஸ்தலம். பெண் சக்தியாக விளங்குவது ஒரு போதும் புறக்கணிக்காது. நாடு நம் நாடு. ஆனால் இந்தியா கூட்டணி, பெண் சக்திக்ககு எதிராக செயல்படுகிறது நாட்டின் துரதிருஷ்டம். சக்தியை அழிக்க முயன்ற அனைவருக்கும் என்ன நடந்தது என்று வரலாற்றிலும், புராணங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று பா.ஜனதா கட்சி தொடங்கப்பட்ட நாள். சில ஆண்டுகளில் ஏராளமானோர் பா.ஜனதாவில் இணைந்தனர். இதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இதற்கு மிகப் பெரிய காரணம், பா.ஜனதா அரசியலை பின்பற்றாமல், தேசிய கொள்கையை பின் பற்றுவதுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடி சஹாரன்பூரில் இருந்து மாலை காசியாபாத் செல்கிறார். அங்கு 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்கள்.
மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ரோடு ஷோ நடக்கிறது.
பின்னர் அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மோடி பேசுகிறார். இதில் 2 லட்சம் பேர் வரை இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.






