என் மலர்
இந்தியா

உத்தரகாண்ட் மாநிலத்தில் தக்காளி கிலோ ரூ.250-க்கு விற்பனை
- பொதுமக்கள் தக்காளியை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
- ராஜஸ்தான் மாநிலத்தில் தக்காளி விலை சரிந்து வருகிறது.
நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் தக்காளியை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் 1 கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கங்கோத்ரி பட்டணத்தில் ரூ.250, யமுனோத்திரியில் ரூ .200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
பெங்களூருவில் ரூ.101 முதல் 121 வரையும், கொல்கத்தாவில் 152 க்கும், டெல்லியில் 120-க்கும், சென்னையில் ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
மும்பையில் ரூ.108-க்கும், உத்தரபிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூரில் ரூ.162-க்கும், ராஜஸ்தான் மாநிலம் சுருவில் ரூ.30-க்கு விற்கப்பட்டு வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் தக்காளி விலை சரிந்து வருகிறது.
சென்னையில் உள்ள ரேசன் கடைகளில் தமிழக அரசு மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Next Story






