search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுவன் கொடூர கொலை- 3 சிறுவர்கள் கைது
    X

    சிறுவன் கொடூர கொலை- 3 சிறுவர்கள் கைது

    • அருகில் வசிக்கும் பெண் ஒருவர் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
    • 12 வயது சிறுவனை சக நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கொடூரமாக கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுவனை சக நண்பர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12 வயது சிறுவனை 3 சிறுவர்கள் சைக்கிள் சங்கிலியால் கழுத்தை நெறித்து பெரிய கல்லால் மண்டையை உடைத்து, கத்தியால் தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

    பின்னர் உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து தங்கள் வீட்டு அருகே உள்ள குப்பை தொட்டியில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

    இதை அருகில் வசிக்கும் பெண் ஒருவர் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக 3 சிறுவர்களை கைது செய்தனர். இதில் ஒருவனுக்கு 11 வயதுதான் ஆகிறது. மற்றவர்களுக்கு முறையே 14, 16 வயதாகிறது.

    3 சிறுவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு 14 நாட்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்னா சர்மா கூறியதாவது:-

    பணத் தகராறில் 12 வயது சிறுவனை சக நண்பர்கள் 3 பேர் திட்டமிட்டு ஒதுக்குப் புறமான இடத்துக்கு வரவழைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்கள். ஆடுகளை வெட்ட பயன்படுத்தும் கூர்மையான கத்தியால் தொண்டையை அறுத்துள்ளனர். 3 சிறுவர்களும் பழக்கமான கொலையாளிகளை போல இந்த கொலையை செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    12 வயது சிறுவனை சக நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கொடூரமாக கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×