search icon
என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • மத்தியப் பிரதேசத்தில் வயதான தலித் தமபதியை கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தி செருப்பு மாலை அணிவித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • . இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவரகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மத்தியப் பிரதேசத்தில் வயதான தலித் தமபதியை கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தி செருப்பு மாலை அணிவித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் முங்காளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிளோரா கிராமத்தில் வசித்து வரும் வயதான தலித் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியின் மகன் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    அவர்மீது நேற்று முன்தினம் (மே 17) காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அந்த இளைஞரின் குடும்பம் கிராமத்தை விட்டு வெளியேறியது. இந்த நிலையில் இன்று (மே 20) அந்த இளைஞரின் வயதான தாய்-தந்தை கிராமத்துக்குள் வந்துள்ளனர்.

    அப்போது அவர்களை பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து 10 க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று சரமாரியாக அடித்து துன்புறுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி செருப்புகளை கோர்த்து மாலையாக அவர்களின் கழுத்தில் அணிவித்திருக்கிறது.

    இதனையடுத்து அந்த இடத்தில இருந்த கும்பல் தலைமறைவாகியுள்ளது. இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவரகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈவ் டீசிங் அந்த இளைஞர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேசம், தலித், தாக்குதல், கிராமம், போலீஸ், வழக்குப்பதிவு

    • விவசாயிகளின் உழைப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாக வேதனை.
    • வீடியோ சமூக ஊடக தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    வெங்காயம் மற்றும் பூண்டு விலையில் கடும் பின்னடைவைச் சந்தித்த பிறகு, மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் பச்சை மிளகாயின் விலை வீழ்ச்சியால் வேதனை அடைந்துள்ளனர்.

    ஒரு கிலோ மிளகாய், 6 முதல் 7 ரூபாய் வரையிலும், சந்தை விலை கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.

    விவசாயிகள் பச்சை மிளகாய் நிரப்பப்பட்ட மூட்டைகளை சாலைகளில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் வீடியோ சமூக ஊடக தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளுக்கு இடையிலான இந்த பரந்த வேறுபாடு காரணமாக விவசாயிகள் ஆத்திரமடைந்துள்ளனர். விவசாயிகளின் உழைப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    • பாலிவுட் நடிகை கரீனா கபூர் ப்ரெக்னன்சி பைபிள் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
    • கரீனா கபூர் மலிவான விளம்பரத்திற்காக பைபிள் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்துள்ளார். கரீனா கபூர் 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார்.

    அந்த சமயத்தில் அவர் ப்ரெக்னன்சி பைபிள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில், கர்ப்பத்தின் அனுபவம் குறித்தும், தனது சவால்களைப் பற்றியும் குழந்தையை எதிர்பார்க்கும் அனைத்து தாய்மார்களுக்கும் ஆரோக்கியமாக இருப்பது பற்றியும் அவர் எழுதியுள்ளார்.

    இந்நிலையில், கரீனா கபூர் புத்தகத்தின் தலைப்பில் பைபிள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக கரீனா கபூர் மீதும் புத்தக விற்பனையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், "உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களின் புனித நூலாக பைபிள் உள்ள நிலையில், கரீனா கபூர் தனது கர்ப்பத்தை பைபிள் உடன் ஒப்பிடுவது தவறு என்றும், கரீனா கபூர் மலிவான விளம்பரத்திற்காக பைபிள் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கரீனா கபூரின் புத்தகத்தின் உடைய தலைப்பில் பைபிள் என ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதை குறித்து கரீனா கபூர் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஆண்டனி தனது மனுவில் புத்தக விற்பனைக்கு தடை விதிக்க கோரியதை அடுத்து, புத்தக விற்பனையாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
    • காந்திலால் பூரியாவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்.

    மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக காந்திலால் பூரியா போட்டியிடுகிறார்.

    இவர் அங்கு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். ஒவ்வொரு பெண்கள் வங்கி கணக்கிலும் இந்த பணம் நேரடியாக வரவு வைக்கப்படும். இது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    2 மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

    இந்த பேச்சுக்கு தொண்டர்கள் மத்தியில் பலத்த கரகோஷமும் எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் திக் விஜய் சிங், மற்றும் ஜிது பட்வாரி முன்னிலையில் காந்திலால் பூரியா இந்த கருத்தை தெரிவித்தார்.

    இதனை ஆதரிப்பது போல மாநில தலைவர் ஜிது பட்வாரி பேசும் போது இரண்டு மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக காந்திலால் பூரியா கூறியது ஒரு அற்புதமான அறிவிப்பு என கூறினார்.

    இந்நிலையில், காந்திலால் பூரியாவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பாஜா எம்.பி. மாயா நரோலியா கூறும்போது, "காங்கிரஸ் தலைவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

    காந்திலால் பூரியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுக்க இருக்கிறோம். அவரின் இந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

    இதற்கு பாராளுமன்ற தேர்தலில்பெண் வாக்காளர்கள் காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.

    • பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாராளுமன்ற தேர்தலின் பொது ஒரு வாக்குச்சாவடிக்கு பாஜக உள்ளாட்சி உறுப்பினர் ஒருவர் தனது மகனை அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் இருப்பது பாஜகவின் பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹரின் மகன் என்றும், 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்த மே 7-ம் தேதி வாக்குச் சாவடிக்கு தனது தந்தையுடன் சென்று வாக்களிக்கும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    அந்த வீடியோவில் தந்தையும் மகனும் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக சின்னமான தாமரை சின்னத்துக்கு வாக்களிப்பது பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. தேர்தல் சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கவுசலேந்திர விக்ரம் சிங் உத்தரவிட்டுள்ளார். அந்த வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரி சந்தீப் சைனி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மந்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசம் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • வாக்குச்சாவடிக்கு சென்ற அவரிடம் நிருபர் கேள்வி கேட்ட நிலையில் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

    பாராளுமன்ற மக்களவை தேர்தலில் நேற்று 93 இடங்களுக்கு 3-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடுமையான வெப்ப அலை வீசிய போதிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.

    நேற்று மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிடுகிறார். இவர் வாக்குப்பதிவின்போது வாக்குச்சவாடிக்கு வந்தார். அப்போது பத்திரிகையாளர் அவரிடம், வெப்ப அலை குறித்து கேள்வி கேட்டார். அதற்கு ஜோதிராதித்ய சிந்தியா "உங்கள் பாக்கெட்டில் வெங்காயத்தை வைத்துக் கொண்டால் போதும்... வெயில் குறித்து கவலைப்படத் தேவையில்லை" எனக் குறிப்பிட்டார்.

    பொதுவாக வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி தருவதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அறிவியல் பூர்வமாக உடலில் வெங்காயம் படும்படி வைத்திருந்தால் உடல்நிலையை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என நிரூபிக்கப்படவில்லை என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    வெப்ப அலையின்போது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் சோர்வை கட்டுப்படுத்த தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் பழ வகையில் சிறந்தது என கூறுகின்றனர்.

    சிவப்பு கலரில் உள்ள வெங்காயத்தில் க்வெர்செடின் (quercetin) என அழைக்கப்படும் வேதிப்பொருள் உள்ளது. அது ஹிஸ்டமைன் எதிர்ப்பு (anti-histamine) விளைவை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்
    • இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்

    மத்தியபிரதேச மாநிலம் தார் பகுதியில் நேற்று பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், "விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்.

    1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் ஏன் அதை 3 துண்டுகளாக பிரித்தார்கள். அவர்கள் அப்போதே முழு நாட்டையும் பாகிஸ்தானாக மாற்றி இந்தியாவின் தடயங்களை அழித்திருக்க வேண்டும்.

    மோடி உயிருடன் இருக்கும் வரை போலி மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவை அழிக்க விட மாட்டேன். ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய காங்கிரஸ் விரும்புகிறது.

    பாஜக 400 இடங்களில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் 'பாபரின் பெயரில்' ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் பூட்டு போட்டுவிடும் மற்றும் ஜம்மு காஷ்மீரின் 370 சட்டப்பிரிவை காங்கிரஸ் மீண்டும் கொண்டுவரும்" என்று தெரிவித்தார்.

    • 93 தொகுதிகளில் மொத்தம் 64.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    • பேருந்தில் தீ பிடித்தவுடன் தேர்தல் அதிகாரிகள் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.

    மத்தியப்பிரதேசம்:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த மாதம் 19, 26 மற்றும் மே 7-ந்தேதி என 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

    நேற்று நடைபெற்ற 3-வது கட்ட தேர்தலில் உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற 93 தொகுதிகளில் மொத்தம் 64.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து 4  எந்திரங்கள் சேதம் அடைந்துள்ளன.

    நேற்று வாக்குப்பதிவு முடிந்த பிறகு பேதுல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கவுலாவில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பேருந்தில் கொண்டு செல்லப்பட்டன. அப்போது திடீரென பேருந்தில் தீப்பிடித்தது.

    பேருந்தில் தீ பிடித்தவுடன் தேர்தல் அதிகாரிகள் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர். இருப்பினும் பேருந்தில் இருந்த 4 எந்திரங்கள் சேதம் அடைந்தன.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது.
    • அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம்.

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் தார் என்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    அம்பேத்கரை காங்கிரஸ் குடும்பத்தினர் மிகவும் வெறுக்கின்றனர் என்பதுதான் உண்மை. பா.ஜனதா 400 இடங்களை பெற்றால், பிரதமர் மோடி அரசியலமைப்பை மாற்றிவிடுவார் என காங்கிரஸ் வதந்தியை பரப்பு வருகிறது.

    பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது. நாங்கள் அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம் என்பதை மக்கள் புரிந்து கொள்வது முக்கியமானது.

    காங்கிரஸ் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வரக்கூடாது என்பதில் மோடி 400 இடங்களை விரும்புகிறார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பாப்ரி லாக் போட்டுவிடக்கூடாது என்பதற்காக மோடி 400 இடங்களை விரும்புகிறார்.

    ஓபிசி இடஒதுக்கீட்டை அவர்களது வாக்கு வங்கிக்கு அளிப்பதை தடுத்த மோடி 400 இடங்களை விரும்புகிறார். எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை கடந்த ஆண்டுகளாக நீட்டிக்க 400-க்கும் அதிகமான இடங்களை பயன்படுத்தியுள்ளோம். பழங்குடியின பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக நியமனம் செய்ய, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பயன்படுத்தியுள்ளோம்.

    மோடி 400 இடங்களை கேட்பது நாட்டின் காலி இடங்களை, தீவுகளை மற்ற நாடுகளுக்கு காங்கிரஸ் அளித்து விடக்கூடாது என்பதற்காகத்தான். எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஓபிசி-யின் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு அவர்களுடைய வாக்கு வங்கிக்குக்கு அளிக்க முடியாது. வாக்கு வங்கியின் அனைத்து ஜாதிகளும் ஓபிசி என ஒரே இரவில் அறிவிக்க முடியாது.

    அரசியலமைப்பை உருவாக்குவதில் அம்பேத்கருக்கு பங்கு மிகக்குறைவு என்றும், அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் நேரு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தார் என்றும் காங்கிரஸ் கூறத் தொடங்கியது. அம்பேத்கரையும் அரசியல் சாசனத்தையும் முதுகில் குத்தியது காங்கிரஸ்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • உங்களின் ஒரு வாக்கு 500 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரமாண்டமான ராமர் கோவிலை உருவாக்கியது.
    • காங்கிரசின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டு பாருங்கள்.

    போபால்:

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் கர்கோனில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    உங்கள் ஒரு வாக்கு இந்தியாவை 5வது பெரிய பொருளாதாரமாக மாற்றியது. இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை அதிகரித்தது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

    ஆதிவாசி மகளை ஜனாதிபதியாக்கியது. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது. ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பியது. இலவச உணவு மற்றும் சிகிச்சைக்கு உத்தரவாதம் அளித்தது.

    இளைஞர்களின் எதிர்காலத்தை உயர்த்தியது. வரம்பற்ற வாய்ப்புகளை உருவாக்கியது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்தது. உங்களின் ஒரு வாக்கு 500 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரமாண்டமான ராமர் கோவிலை உருவாக்கியது.

    பாகிஸ்தானில், இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் செய்யப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டி வருகின்றனர். மோடிக்கு எதிராக வாக்களிக்க சிலரையும் காங்கிரஸ் கேட்டுக் கொள்கிறது.

    குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களிடம் மோடிக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். அவர்கள் அவநம்பிக்கையால் சூழப்பட்டிருக்கிறார்கள். வாக்கு ஜிகாத் ஏற்கத்தக்கதா? இதை ஜனநாயகத்தில் அனுமதிக்க முடியுமா? காங்கிரஸ் எனக்கு எதிராக வாக்களிக்கும் ஜிகாத்துக்கு அழைக்கிறது. அவர்களை நான் அம்பலப்படுத்தியதால், எனக்கு எதிரான துஷ்பிரயோகங்களை செய்கி றார்கள்.

    வரலாற்றின் திருப்பு முனையில் இந்தியா உள்ளது, வாக்கு ஜிகாத் பலிக்குமா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.


    காங்கிரசின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டு பாருங்கள். ராமர் கோவிலுக்கு சென்றதற்காக தான் மிகவும் துன்புறுத்தப் பட்டதாகவும், அதனால் காங்கிரசை விட்டு வெளியேறியதாகவும் ஒரு பெண் கூறினார்.

    காங்கிரசை முஸ்லீம் லீக் மற்றும் மாவோயிஸ்டுகள் அபகரித்துள்ளனர் என்று மற்றொருவர் கூறினார். இன்னொருவர் கூறும் போது, ஷா பானோ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அவரது தந்தை மாற்றியது போல் ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) மாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

    மக்களின் நம்பிக்கை அல்லது தேச நலன் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கவலைப்படவில்லை. இவர்களுக்குள் தேச விரோத கருத்துக்களை வெளியிடுவதில் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்டமாக காங்கிரசுக்கு பாகிஸ்தான் மீதான அன்பு அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஒருவர், நமது ராணுவம் தீவிரவாத தாக்குதல் நடத்துகிறது என்றும் பாகிஸ்தான் அப்பாவி என்றும் கூறினார்.

    மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இல்லை என மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறினார். பாகிஸ்தான் மீது அன்பையும், நமது ராணுவத்தின் மீது வெறுப் பையும் காங்கிரஸ் காட்டுகிறது. இது ஏன் என்று காங்கிரசை கேட்க விரும்புகிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் நரேந்திர சிங் தோமரை எதிர்த்து போட்டி தோல்வியடைந்தார்.
    • மீண்டும் மொரேனா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி கேட்ட நிலையில் காங்கிரஸ் மறுத்துள்ளது.

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த அக்சய் பாம் நேற்று திடீரென வேட்பு மனுவை திரும்பப் பெற்றதுடன் பா.ஜனதாவில் இணைந்தார்.

    இந்த நிலையில் 6 முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த ராம்நிவாஸ் ராவத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். இவர் சியோபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

    1990, 1993, 2003, 2008, 2013-ல் விஜய்பூர் என்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

    1998-ம் ஆண்டு பா.ஜனதாவின் பாபுலால் மெவ்ராவை எதிர்த்து போட்டியிட்டார். இதில் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2018-ல் பா.ஜனதா வேட்பாளர் சீதாராமை எதிர்த்து போட்டியிட்டு 2840 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் நரேந்திர சிங் தோமரை எதிர்த்து போட்டியிட்டார். 1,13,341 வாக்குகள் வித்தியாசத்தில் மொரேனா தொகுதியில் தோல்வியை சந்தித்தார். தற்போதைய தேர்தலிலும் மொரேனா தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். ஆனால், காங்கிரஸ் சத்யபால் சிங் சிகர்வாருக்கு வாய்ப்பு வழங்கியது.

    • வாக்குப்பதிவிற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் திரும்பப் பெற்றார்.
    • இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி பம், தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்தார்.

    பாஜக வேட்பாளருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி வேட்பு மனுவை திரும்பப் பெற்றார்.

    வாக்குப்பதிவிற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பு மனுவை காங்கிரஸ் வேட்பாளர் திரும்பப் பெற்றுள்ளார்.

    ஏற்கனவே சூரத்தில், அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார்.

    தற்போது இந்தூர் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் மனுவை திரும்ப பெற்றதால், பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவாகியுள்ளது.

    இதற்கிடையே, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட 2 மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதால், அத்தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ×