என் மலர்
மத்தியப்பிரதேசம்
- இந்தியாவில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாக கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
- குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு வேலை இழப்பு அதிகமாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராமங்களில் உள்ள சாலைகள், ஒரு ஊரின் பெயர் அல்லது ஒரு தெருவின் பெயரை மாற்றி கேட்டிருப்போம்.
ஏன்... ரெயில் நிலையம், பேருந்து நிலையத்தின் பெயரை கூட மாற்றப்பட்டது குறித்து கேள்வி பட்டிருப்போம். ஆனால் மத்திய பிரதேச அரசு ஒரு வினோதமான முடிவு எடுத்துள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தொழில்நுட்பம் போன்ற உயர் படிப்பை முடித்தவர்கள் கூட வேலைக்கிடைக்காமல் திண்டாடி வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
பொதுவாக படித்துவிட்டு வேலை இல்லாத இளைஞர்களை வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் என அழைப்பர். ஆனால் தற்போது இனிமேல் மத்திய பிரதேசத்தில் வேலையில்லா இளைஞர்களை வேலையில்லா இளைஞர்கள் (unemployed youth) என அழைக்கக்கூடாதாம். ஆர்வமுள்ள இளைஞர்கள் (Aspirational Youth) என அழைக்க வேண்டும் என மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் மத்திய பிரதேச அரசு கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக போபாலைச் சேர்ந்த பிரகாஷ் சென் கூறுகையில் "நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். ஐ.டி. துறையில் நல்ல வேலை கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் கடுமையான போட்டியின் காரணமாக எனக்கு வேலை கிடைக்கவில்லை. கொரோனா ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு ஏராளமானவர்கள் வேலை இழந்து உள்ளனர். தற்போது டீ ஸ்டால் நடத்தி வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
- பிரியாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதை சிறுது காலத்திலேயே சிவப்பிரகாஷ் அறிந்து கொண்டார்.
- ஒரு விபத்தில் சிவபிரகாஷ் படுகாயமடைந்த பின்னர் மனைவி பிரியா தனது பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் நேரடி அமர்வின் போது ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரின் மனைவி மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் கூற்றுப்படி, மத்தியப் பிரதேசம், ரேவா மாவட்டத்தில் வசித்து வந்த சிவபிரகாஷ் திரிபாதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரியா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள் இருக்கிறாள். ஆனால் பிரியாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதை சிறுது காலத்திலேயே சிவப்பிரகாஷ் அறிந்து கொண்டார். இதனால் இருவருக்கும் இடையில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதற்கிடையே ஒரு விபத்தில் சிவபிரகாஷ் படுகாயமடைந்த பின்னர் மனைவி பிரியா தனது பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த சிவப்பிரகாஷ் கடந்த மார்ச் 16 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நேரலையில் தற்கொலைக்கு முன் பேசிய அவர், தனது மனைவியும் மாமியாரும்தான் தற்கொலைக்கு காரணம் என்றும் திருமண வாழ்க்கையால் தனது சந்தோஷத்தை இழந்துவிட்டதாகவும் கூறினார்.
சிவபிரகாஷ் தற்கொலை செய்துகொள்ளும் 44 நிமிடங்கள் இன்ஸ்டா நேரலையை அவரது மனைவி பிரியாவும், மாமியாரும் பார்த்துக்கொண்டிருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக வழகுபதவு செய்து விசாரித்து வந்த போலீசார் தற்போது பிரியாவையும் அவரது தாயையும் கைது செய்துள்ளனர்.
- லலிதா பாய் என்ற பெண் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.
- இந்த கொலை குற்றத்திற்காக 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2023 ஆண்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் தற்போது உயிரோடு வீடு திரும்பிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லலிதா பாய் என்ற பெண் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை 2023 இல் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்நிலையில், லலிதா பாய் தற்போது உயிரோடு வீடு திரும்பியுள்ளது அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
லலிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், "ஷாருக் என்ற நபர் தன்னை ஒருவரிடம் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அதன்பின்பு என்னை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிற்கு அழைத்து சென்றார்கள். செல்போன் இல்லாததால் எனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன்" என்று தெரிவித்தார்.
2023 செப்டம்பரில் லலிதா பாய் காணாமல் போன சமயத்தில் லாரி விபத்தில் உடல் நசுங்கி பெண் ஒருவர் உயிரிழந்த வீடியோ வெளியானது. இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த டாட்டூவை பார்த்து இது லலிதா தான் என்று அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் இம்ரான், ஷாருக், சோனு, எஜாஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- காரை சுத்தம் செய்வதற்காக காரின் சாவியை ஓட்டுநர் கேட்டார்.
- திருடப்பட்ட 6 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து மீட்டு ஓனரிடம் ஒப்படைத்து, ஓட்டுனரை கைது செய்தது.
தன் மீது கோபமாக இருக்கும் மனைவியை சமாதனப்படுத்த கணவன், தனது முதலாளியின் விலையுயர்ந்த காரை திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பலாசியா பகுதியில் வசிக்கும் ராகேஷ் அகர்வால், ரேஞ்ச் ரோவர் காரை வைத்திருக்கிறார். இந்த சொகுசு காரின் விலை சுமார் ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இவரின் வீட்டில் காண்ட்வா மாவட்டத்தைச் சேர்ந்த துர்கேஷ் ராஜ்புத் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காலை காரை சுத்தம் செய்வதற்காக காரின் சாவியை ஓட்டுநர் கேட்டார். உரிமையாளரும் ஓட்டுநரை நம்பி சாவியைக் கொடுத்தார். ஆனால் அதன்பின் அவரை காணவில்லை. போன் செய்தும் எடுக்காததால் தனது கார் திருடப்பட்டதை உணர்ந்த ஓனர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீஸ், காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் மூலம் காரை திருடப்பட்ட 6 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து மீட்டு ஓனரிடம் ஒப்படைத்து, ஓட்டுனரை கைது செய்தது.
விசாரணையின் போது, தன் மீது கோபமாக இருக்கும் தனது மனைவியை சமாதானப்படுத்தக் காரைத் திருடியதாக ஓட்டுநர் கூறியது போலீசை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை அடித்து கொலை செய்தார்.
- போலீசார் சந்தேகத்தின் பேரில் பிரதீப் குர்ஜாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த குவாலியரை சேர்ந்தவர் பிரதீப் குர்ஜார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இதனால் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். டி.வி. நாடகங்களில் வரும் குற்ற சம்பவங்களை பார்த்து அதன்படி மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை அடித்து கொலை செய்தார்.
பின்னர் மனைவியின் பிணத்தை தனது பைக்கில் எடுத்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் வீசினார். அந்த வழியாக வந்த வாகனங்கள் பிணத்தின் மீது ஏறி இறங்கி சென்றதால் உடல் சிதைந்தது.
இதுகுறித்து பிரதீப் குர்ஜார் கம்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தானும் தனது மனைவியும் பைக்கில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. இதில் எனது மனைவி இறந்து விட்டார். எனக்கு காயங்கள் ஏற்பட்டது என போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார் விபத்து என வழக்கு பதிவு செய்தனர். பிரதீப் குர்ஜாரின் மனைவிக்கு இறுதி சடங்குகள் நடந்த போது அவரது உறவினர்கள் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்து வந்தார். இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் பிரதீப் குர்ஜாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மனைவியை கொலை செய்து விபத்து நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரதீப் குர்ஜாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- குழந்தைகள் பரீட்சைக்கு படிப்பதாக கூறி, இசை ஒலியை குறைக்க கூறியுள்ளார்.
- தரையில் சரிந்து விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது பக்கத்து வீட்டில் பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னதால் 64 வயது முதியவர் கொலை செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேசம் மைஹார் மாவட்டத்தில் ராம்நகர் பகுதியில் உள்ள மான்கிசர் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஹோலி கொண்டாட்டத்தின்போது தனது வீட்டில் தீபு கேவத் என்பவர் அதிக ஒலியில் பாட்டு போட்டுள்ளார். இந்நிலையில் அவரது பக்கத்துக்கு வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சங்கர் கேவத் தனது குழந்தைகள் பரீட்சைக்கு படிப்பதாக கூறி, இசை ஒலியை குறைக்க கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரதமடைந்த தீபுவும் அவரது ஐந்து உறவினர்களும் சங்கர், அவரது தந்தை முன்னா கேவத் (64 வயது) மற்றும் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இதில் தந்தை முன்னா கேவத் படுகாயமடைந்தார்.
தரையில் சரிந்து விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் முன்னா கேவத் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தீபு மற்றும் அவரது உறவினர்கள் தலைறைவாகினர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
- குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக மந்திரவாதி கூறியுள்ளார்.
- குழந்தையின் கண் பார்வை குறித்து 2 நாட்களுக்குப்பின்தான் தெரியவரும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் உடல் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன் காரணமாக குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. ஆனால், குழந்தையை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லாமல் பெற்றோர் அதே கிராமத்தை சேர்ந்த ராகவீர் என்ற மந்திரவாதியிடம் காண்பிப்பதற்காக அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக மந்திரவாதி கூறியுள்ளார். இந்த மூடநம்பிக்கையை உண்மை என நம்பிய தம்பதி, குழந்தையின் உடலில் புகுந்துள்ள ஆவியை வெளியேற்றுமாறு மந்திரவாதி ராகவீர் தடக் இடம் வேண்டியுள்ளனர்.
இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் செங்கல்களை அடுக்கிவைத்து அதில் விறகுகள் கொண்டு தீ மூட்டியுள்ளார். பின்னர், குழந்தையின் உடலில் புகுந்துள்ள ஆவியை விரட்டுவதாக கூறி பெற்றோர் கண் எதிரே அந்த தீயின் முன் பச்சிளம் குழந்தையை ராகவீர் தடக் கட்டி தலைகீழாக தொங்கவிட்டுள்ளார். இதனால் பச்சிளம் குழந்தை தீயின் வெப்பத்தால் அலறி துடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் பச்சிளம் குழந்தையின் கண் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதைக்கண்டு பதறிய பெற்றோர் குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். குழந்தையின் கண் பகுதியில் கடுமையாக பாதிப்பு இருந்ததை கண்ட டாக்டர்கள் இது குறித்து பெற்றோரிடம் விசாரித்தனர்.
அப்போது, மூடநம்பிக்கையில் குழந்தையை தீயின்முன் கட்டி தொங்கவிட்டதை பெற்றோர் கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பார்வையை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் கண் பார்வை குறித்து 2 நாட்களுக்குப்பின்தான் தெரியவரும் என்று கூறிவிட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவீன காலத்திலும் மூடநம்பிக்கையின் உச்சத்தால் தீயின் முன் 6 மாத குழந்தை தலைகீழாக தொங்கவிடப்பட்டதில் கண்பார்வை பாதிப்படைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விவாகரத்து வழங்கிய நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்திருந்தார்.
- திருமணத்திற்குப் பிறகு மனைவி தனது நண்பர்களுடன் கண்ணியமற்ற முறையில் உரையாடலில் ஈடுபட கூடாது.
திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது 'எதிர்பாலின' நண்பர்களுடன் 'ஆபாசமான' முறையில் உரையாட கூடாது என்றும், எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விவாகரத்து வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனைவி தனது ஆண் நண்பர்களுடன் அவளது பாலியல் வாழ்க்கை குறித்து ஆபாசமான முறையில் வாட்சப்பில் சாட் செய்ததை நீதிமன்றத்தில் கவனத்தில் கொண்டு பலவேறு கருத்துக்களை தெரிவித்தது.
அதாவது, "திருமணத்திற்குப் பிறகு கணவரோ, மனைவியோ தங்களது நண்பர்களுடன் கண்ணியமற்ற முறையில் ஆபாசமான உரையாடலில் ஈடுபட கூடாது. தனது மனைவி மொபைல் மூலம் இத்தகைய மோசமாக பேசுவதை எந்த கணவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்.
திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் நண்பர்களுடன் மொபைல் மற்றும் பிற வழிகளில் உரையாடலாம். ஆனால் அந்த உரையாடல் கண்ணியமானதாக இருக்க வேண்டும்.
கணவரின் எதிர்ப்பு தெரிவித்தும் மனைவி தனது ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து மோசமாக உரையாடுவது நிச்சயமாக கணவருக்கு மனரீதியிலான கொடுமையை ஏற்படுத்தும்" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இறுதியில், கணவருக்கு விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டு மனைவியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- 1½ அடி உயரம் உடைய இந்த கற்சிலையை உத்தரபிரதேசத்தில் இருந்து அந்த கிராமத்தினர் வாங்கியிருந்தனர்.
- போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்து, மாயமான சிலையையும், அதை திருடிச்சென்றவர்களையும் தேடி வருகின்றனர்.
சத்தார்பூர்:
மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பாரி கிராமத்தில் கடந்த 11-ந்தேதி அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட்டது. 1½ அடி உயரம் உடைய இந்த கற்சிலையை உத்தரபிரதேசத்தில் இருந்து அந்த கிராமத்தினர் வாங்கியிருந்தனர்.
இந்த சிலையை நேற்று காலையில் காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதை பெயர்த்து எடுத்து சென்றிருந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கே குவிந்தனர். பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்து, மாயமான சிலையையும், அதை திருடிச்சென்றவர்களையும் தேடி வருகின்றனர்.
திறக்கப்பட்ட 2 நாட்களில் அம்பேத்கர் சிலை மாயமாகி இருந்த தகவல் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
- நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் டிராபி பட்டம் வென்றது.
- மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதனை நாடு முழுவதும் பலர் வீதிகளில் திரண்டு கொண்டாடினர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் பகுதியில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது.
இந்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர்- மோவ் நகரில் இரு குழுக்களிடையே வகுப்புவாத மோதல் வெடித்தது.
இரவு 10 மணி அளவில் 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மோட்டார் சைக்கிள்களில் வெற்றி ஊர்வலம் நடத்தினர். ஊர்வலம் ஜமா மசூதி பகுதியை அடைந்தவுடன், அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பினர் என்று கூறப்படுகிறது. ஜாமா மசூதி அருகே அவர்கள் பட்டாசுகளை வெடித்தனர். அங்கு மக்கள் இரவு நேர பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
எனவே இரு குழுக்களுக்கும் இடையிலான ஏற்பட்ட வாக்குவாதம் விரைவில் வன்முறையாக மாறியது. சுமார் 3 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்த மோதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களைக் கலைத்தனர்.
இந்நிலையில், இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் தலைகளை மொட்டையடுத்து போலீசார் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- ஊர்வலம் ஜமா மசூதி பகுதியை அடைந்தவுடன், அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பி பட்டாசுகளை வெடித்தனர்.
- 3 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன.
நேற்று நியூசிலாந்து உடனான சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை நாடு முழுவதும் பலர் வீதிகளில் திரண்டு கொண்டாடினர்.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் பகுதியில் நேற்று இரவு சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது.
இந்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர்- மோவ் நகரில் இரு குழுக்களிடையே வகுப்புவாத மோதல் வெடித்துள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் 100 ரசிகர்கள் மோட்டார் சைக்கிள்களில் வெற்றி ஊர்வலம் நடத்தினர்.
ஊர்வலம் ஜமா மசூதி பகுதியை அடைந்தவுடன், அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பினர் என்று கூறப்படுகிறது. ஜாமா மசூதி அருகே அவர்கள் பட்டாசுகளை வெடித்தனர். அங்கு மக்கள் இரவு நேர பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
எனவே இரு குழுக்களுக்கும் இடையிலான ஏற்பட்ட வாக்குவாதம் விரைவில் வன்முறையாக மாறியது. இரு தரப்பிலிருந்தும் கல்வீச்சுக்கு சம்பவங்கள் அரங்கேறின.
பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. சுமார் 3 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்த மோதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களைக் கலைத்தனர். கடைகள் மற்றும் வாகனங்களில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர். நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மோவ் கூடுதல் எஸ்பி ரூபேஷ் திவேதி தெரிவித்தார்.
- குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் பாஜக-வுக்கு வேலைப்பார்ப்பதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு.
- அவ்வாறு பணியாற்றும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை களையெடுக்க வேண்டியது அவசியம்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றிருந்தார். அப்போது காங்கிரஸ் தொண்டர்களிடையே ராகுல் காந்தி பேசினார். அப்போது, குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக-வுக்காக பணியாற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை களையெடுக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி இவ்வாறு பேசியதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் தான் மத்திய பிரதேச மாநில முதல்வராக இருக்கும்போது, குஜராத் மாநில தேர்தல் பிரசாரத்திற்காக சென்றேன். அப்போது ஆர்.எஸ்.எஸ். பற்றி பேச வேண்டாம். இந்துக்கள் கோப்படுவார்கள் என என்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது என பழைய சம்பவத்தை திக்விஜய் சிங் நினைவு கூர்ந்துார்.
ஆர்.எஸ்.எஸ். இந்துக்களை பிரதிநிதித்துவம் படுத்துவதில்லை என திக்விஜய் சிங் கூறினார்.
இது தொடர்பாக திக்விஜய் கூறுகையில் "இந்து மத குரு சங்கராச்சாரியார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிறுவப்பட்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளார். அது இன்னும் நடைமுறையில் உள்ளது.
அவர்களில் எந்த சங்கராச்சாரியார் இன்று பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவாளராக உள்ளார்?. பாஜக என்பது மதத்தின் பெயரால் மக்களை கொள்ளையடித்து அதிகாரத்தைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சுரண்டல் சக்திகளின் ஒரு குழு ஆகும்" என்றார்.