search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை முறைகேடு: விளக்கம் கேட்டு நோட்டீசு
    X

    திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை முறைகேடு: விளக்கம் கேட்டு நோட்டீசு

    • ரூ. 530 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    திருமலை:

    திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டில் ரூ.500 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

    இந்த அறக்கட்டளை மூலம் வரும் பணம், மீனவர்கள், எஸ்.சி, எஸ்.டி.க்கள் வசிக்கும் பகுதிகளில் ஏழுமலையான் கோவில்களை கட்டவும், நலிந்த கோவில்களை மராமத்து செய்யவும், தீப, தூப நைவேத்தியங்களுக்கு உதவவும் மட்டுமே பயன்படுத்துவதாக தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

    ஆனால், இதுவரை எத்தனை கோவில்கள் கட்டப்பட்டது? எவ்வளவு செலவு செய்தனர் என்பது குறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதில் ரூ. 530 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்டிட காண்டிராக்ட் வழங்கியதிலும் கோடிக் கணக்கில் முறை கேடுகள் நடந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    ஆதலால், அப்போதைய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் திருப்பதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அப்போதைய அறங்காவலர் குழு தலைவருமான கருணாகர் ரெட்டியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஆண்டுக்கு ரூ. 300 கோடி வரை மட்டுமே கான்டிராக்ட் பணிகள் நடத்தப்படும். ஆனால் இவர்களது நிர்வாகத்தில் மட்டும், சிம்ஸ் தேவஸ்தான மருத்துவ மனைக்கு ரூ. 77 கோடி, கோவிந்தராஜ சத்திரம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் காம்ப்ளக்ஸ் கட்ட ரூ. 420 கோடி ஒதுக்கப்பட்டன.

    மேலும் இதுபோல் பல சிவில் பணிகளுக்கும் கோடி கணக்கில் நிதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கமிஷன் பல கோடி பெற்றுள்ளதாக வந்த புகார்களின் பேரில் தர்மாரெட்டி மற்றும் கருணாகர் ரெட்டிக்கும், தேவஸ்தான ஆடிட்டர் பாலாஜி, முன்னாள் அறங்காவலரான ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன.

    Next Story
    ×