search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வினேஷ் போகத் பயிற்சியாளர்கள் பாரிஸுக்கு சுற்றுலா சென்றார்களா? - பஞ்சாப் முதல்வர் காட்டம்
    X

    வினேஷ் போகத் பயிற்சியாளர்கள் பாரிஸுக்கு சுற்றுலா சென்றார்களா? - பஞ்சாப் முதல்வர் காட்டம்

    • பயிற்சியாளர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் இப்படிப்பட்ட தவறுகள் நடக்கின்றன
    • வினேஷ் போகத் நிச்சயம் தங்கம் வென்றிருப்பார்

    பாரீஸ் ஒலிம்பிக்கில் நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

    இதனையடுத்து, வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து அவரது மாமா மகாவீர் போகத் கண்ணீர் மல்க பேசினார்.

    "நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. வினேஷிடம் இருந்து தங்கத்தை நாடே எதிர்பார்த்தது. போட்டியில் விதிகள் உள்ளன, ஆனால் ஒரு மல்யுத்த வீரர் 50-100 கிராம் அதிக எடையுடன் இருந்தால் வழக்கமாக அனுமதிப்பார்கள். வேதனையடைய வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கிறேன், ஒரு நாள் அவர் நிச்சயம் ஒரு பதக்கத்தைக் கொண்டு வருவாள். அடுத்த ஒலிம்பிக்கிற்கு அவரை தயார் செய்வேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் வினேஷ் போகத்தின் மாமா மகாவீர் போகத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் பயிற்சியாளர்களுக்கும், பிசியோதெரப்பி நிபுணர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் இப்படிப்பட்ட தவறுகள் நடக்கின்றன. பயிற்சியாளர்கள் பாரிஸுக்கு சுற்றுலா சென்றிருக்கிறதா?

    வினேஷ் போகத் விளையாடிய அரையிறுதி போட்டியை நான் பார்த்தேன். அவர் நிச்சயம் தங்கம் வென்றிருப்பார்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

    Next Story
    ×