search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த தயாரா?- சித்தராமையாவுக்கு சவால் விட்ட எடியூரப்பா
    X

    சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த தயாரா?- சித்தராமையாவுக்கு சவால் விட்ட எடியூரப்பா

    • மக்களவை தேர்தலில் பாஜக 19 இடங்களில் வெற்றி பெற்றது.
    • இந்த 19 இடங்களில் வெற்ற பெற்றதுடன், 142 சட்டமன்ற இடங்களில் அதிகமான வாக்குகள் பெற்றோம்.

    கர்நாடக மாநில மக்கள் பயனற்ற வாக்குறுதிகள், பண பலம் மற்றும் அதிகார பலத்தை புறந்தள்ளியுள்ளனர். மக்களவை தேர்தலில் மக்கள் பாஜவை தேர்ந்தெடுத்துள்ளனர். தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எடியூரப்பா கூறியதாவது:-

    சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் சட்டமன்றத்தை கலைத்துவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்த தயாரா? என சாவல் விடுகிறேன். அதன்பிறகு உங்களுடைய நிலை என்ன? என்பது உங்களுக்கு தெரியவரும். தேர்தல் நடத்தப்பட்டால் பாஜக 140-ல் இருந்து 150 வரையிலான இடங்களை பிடிக்கும்.

    மக்களவை தேர்தலில் பாஜக 19 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் 142 சட்டமன்ற இடங்களில் அதிகமான வாக்குகளை பெற்றோம். ஒரு வருடத்திற்கு முன்னதாக 134 இடங்களில் வெற்றி பெற்று கார்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தற்போது சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட பல அமைச்சர்களின் சட்டமன்ற இடங்களில் பாஜக உடன் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.

    இது ஊழலில் ஈடுபட்டு, மக்களின் நலனை புறந்தள்ளி ஒரு வருடத்திற்குள் மக்கள் ஆதரவை இழந்துள்ளது என்பதை காண்பிக்கிறது. இதன்மூலம் ஆட்சியில் தொடர் தார்மீக உரிமை இல்லை. மக்கள் பண அதிகாரம் உள்ளிட்டவைகளை புறந்தள்ளி, மோடியின் மீது தங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

    பயனற்ற வாக்குறுதிகள் காரணமாக அனைத்து பொருட்களின் விலைவாசியையும் அதிகரித்து விட்டது. பணவீக்கத்திற்கு அடித்தளத்தை அமைத்தது.

    இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.

    Next Story
    ×