search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருச்சூரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் வாலிபர் பலி
    X

    திருச்சூரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் வாலிபர் பலி

    • பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வாலிபர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.
    • வெடி விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த வடக்காஞ்சேரியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்கிருந்த வாலிபர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.

    அவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    பட்டாசு ஆலையில் வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருந்ததா? விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×