search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜிப்மர்-பிரெஞ்சு தூதரகத்திற்கு எம்.பி. பெயரில் போலி மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல்
    X

    ஜிப்மர்-பிரெஞ்சு தூதரகத்திற்கு எம்.பி. பெயரில் போலி மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல்

    • ஜிப்மர் வளாகம், பிரெஞ்சு தூதரகம் ஆகியவற்றுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • எம்.பி. பெயரிலல் வந்துள்ள மெயில் ஐ.டி. அனைத்தும் போலியானது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வாலுக்கு எம்.பி. பெயரில் இமெயில் வந்தது.

    அதில் ஜிப்மரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. 2-வது நாளாக வந்த மெயிலில் பிரெஞ்சு தூதரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது.

    அங்கும் சோதனை நடத்தியதில் புரளி என தெரியவந்தது. இந்த மெயில் குறித்து புதுவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். எம்.பி. பெயரிலல் வந்துள்ள மெயில் ஐ.டி. அனைத்தும் போலியானது. அவை வெளிநாட்டில் இருந்து மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

    இது எந்த நாட்டிலிருந்து அனுப்பப்பட்டது? இதை அனுப்பியது யார்? என சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டெல்லி சைபர் கிரைம் போலீசார் உதவியையும் புதுவை சைபர் கிரைம் போலீசார் நாடியுள்ளனர்.

    ஜிப்மர் வளாகம், பிரெஞ்சு தூதரகம் ஆகியவற்றுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×